நாம் அனைவரும் சகோதர, சகோதரிகளே.. ஹிஜாப் விவகாரம் பற்றி மாணவி முஸ்கான் உருக்கம்
பெங்களூர்: ‛‛நாங்கள் அரசியலமைப்பை நம்புகிறோம். நாம் அனைவரும் சகோதர சகோதரிகளாக கல்லூரிக்கு செல்ல வேண்டும். ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்'' என ஹிஜாப் தொடர்பான தீர்ப்புக்கு முன்பு கல்லூரி மாணவி முஸ்கான் கூறினார்.
உடுப்பி மாவட்ட கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. ஹிஜாப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டங்கள் வெடித்தன.
இது கர்நாடகத்தின் சில இடங்களில் வன்முறையானது. இதையடுத்து பள்ளி, கல்லூிகள் தற்காலிமாக மூடப்பட்டன. இந்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

மாணவிகள் வழக்கு
இதற்கிடையே ஹிஜாப் தடையை நீக்க கோரி உடுப்பி மாவட்ட கல்லூரி மாணவிகள் பெங்களூரில் உள்ள கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி கிருஷ்ண தீக்சித் விசாரித்தார். இந்த வழக்கை அவர் மூவர் அமர்வுக்கு மாற்றினார். தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி அமர்வு விசாரித்தது.

இடைக்கால உத்தரவு
இந்த மூவர் அமர்வு மாணவர்கள் மத அடையாள ஆடைகள் அணிந்து வகுப்புக்கு செல்ல உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்றது. மொத்தம் 11 நாட்கள் விசாரணை நடைபெற்ற நிலையில் அரசு தரப்பு மற்றும் மனுதாரர்களின் தரப்பில் வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன. மனுக்கள் மீதான விசாரணை பிப்ரவரி 25ல் முடிவடைந்தது.

உயர்நீதிமன்ற தீர்ப்பு
இதையடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இன்று காலை 10.30 மணிக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி தீர்ப்பு வழங்கினர். ஹிஜாப் என்பது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசிய விஷயமல்ல எனக்கூறிய உயர்நீதிமன்றம், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் எனக்கூறி கர்நாடக அரசின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது.
Recommended Video

நாம் சகோதர சகோதரிகள்
தீர்ப்பு வருவதற்கு முன்பே போராட்டத்தில் பங்கேற்ற மாணவி முஸ்கான் என்ற கூறும்போது, ‛‛நாங்கள் அரசியலமைப்பு சட்டத்தை நம்புகிறோம். தீர்ப்புக்காக காத்து இருக்கிறோம். அனைவரும் அமைதி காக்க வேண்டும். நாம் அனைவரும் சகோதர சகோதரிகளாக கல்லூி செல்ல வேண்டும். பிரச்சனைக்கு முன்பு எப்படி இருந்தோமோ அதேபோல் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். நான் அவர்களை(ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் நடத்தியவர்கள்) எனது சகோதர்களாக நினைக்கிறேன்'' என்றார்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications