நாம் அனைவரும் சகோதர, சகோதரிகளே.. ஹிஜாப் விவகாரம் பற்றி மாணவி முஸ்கான் உருக்கம்
பெங்களூர்: ‛‛நாங்கள் அரசியலமைப்பை நம்புகிறோம். நாம் அனைவரும் சகோதர சகோதரிகளாக கல்லூரிக்கு செல்ல வேண்டும். ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்'' என ஹிஜாப் தொடர்பான தீர்ப்புக்கு முன்பு கல்லூரி மாணவி முஸ்கான் கூறினார்.
உடுப்பி மாவட்ட கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. ஹிஜாப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டங்கள் வெடித்தன.
இது கர்நாடகத்தின் சில இடங்களில் வன்முறையானது. இதையடுத்து பள்ளி, கல்லூிகள் தற்காலிமாக மூடப்பட்டன. இந்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

மாணவிகள் வழக்கு
இதற்கிடையே ஹிஜாப் தடையை நீக்க கோரி உடுப்பி மாவட்ட கல்லூரி மாணவிகள் பெங்களூரில் உள்ள கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி கிருஷ்ண தீக்சித் விசாரித்தார். இந்த வழக்கை அவர் மூவர் அமர்வுக்கு மாற்றினார். தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி அமர்வு விசாரித்தது.

இடைக்கால உத்தரவு
இந்த மூவர் அமர்வு மாணவர்கள் மத அடையாள ஆடைகள் அணிந்து வகுப்புக்கு செல்ல உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்றது. மொத்தம் 11 நாட்கள் விசாரணை நடைபெற்ற நிலையில் அரசு தரப்பு மற்றும் மனுதாரர்களின் தரப்பில் வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன. மனுக்கள் மீதான விசாரணை பிப்ரவரி 25ல் முடிவடைந்தது.

உயர்நீதிமன்ற தீர்ப்பு
இதையடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இன்று காலை 10.30 மணிக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி தீர்ப்பு வழங்கினர். ஹிஜாப் என்பது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசிய விஷயமல்ல எனக்கூறிய உயர்நீதிமன்றம், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் எனக்கூறி கர்நாடக அரசின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது.
Recommended Video

நாம் சகோதர சகோதரிகள்
தீர்ப்பு வருவதற்கு முன்பே போராட்டத்தில் பங்கேற்ற மாணவி முஸ்கான் என்ற கூறும்போது, ‛‛நாங்கள் அரசியலமைப்பு சட்டத்தை நம்புகிறோம். தீர்ப்புக்காக காத்து இருக்கிறோம். அனைவரும் அமைதி காக்க வேண்டும். நாம் அனைவரும் சகோதர சகோதரிகளாக கல்லூி செல்ல வேண்டும். பிரச்சனைக்கு முன்பு எப்படி இருந்தோமோ அதேபோல் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். நான் அவர்களை(ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் நடத்தியவர்கள்) எனது சகோதர்களாக நினைக்கிறேன்'' என்றார்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications