ஜிஎஸ்டி... குருட்டு பூனை விட்டத்தில் பாய்ந்த கதையா இருக்கே!
ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரையிலும் தாக்கல் செய்த கொள்முதல், விற்பனை மற்றும் நிகர வரிக்கான ஜிஎஸ்டிஆர்-3பி படிவத்திற்கும், இறுதியாக தாக்கல் செய்த படிவத்திற்கும் 84 சதவிகிதம் படிவங்கள் சுத்தமாக..
டெல்லி: வர்த்தகர்களும் தொழில் நிறுவனங்களும் ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரையிலும் தாக்கல் செய்த கொள்முதல், விற்பனை மற்றும் நிகர வரிக்கான ஜிஎஸ்டிஆர்-3பி படிவத்திற்கும், இறுதியாக தாக்கல் செய்த படிவத்திற்கும் 84 சதவிகிதம் படிவங்கள் சுத்தமாக பொருந்தவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
2017ம் ஆண்டு ஜூலை முதல் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டது. ஆனால், கொள்முதல், விற்பனை, உள்ளீட்டு வரிப்பயன்பாடு மற்றும் நிகர வரி செலுத்துவதற்கான படிவங்கள் அனைத்தும் கடந்த ஆகஸ்டு மாத இறுதியில்தான் முழு வடிவம் தரப்பட்டு ஜிஎஸ்டி இணையதளத்திள் அனைவருக்கும் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது.
ஜிஎஸ்டிஆர் படிவங்கள் அனைத்தும் ஆகஸ்டு மாத இறுதி முதல் பயன்பாட்டிற்கு விடப்பட்டாலும், ஜிஎஸ்டிஆர் படிவங்களை வர்த்தகர்களும் தொழில் துறையினரும் பயன்படுத்துவதற்கு சிரமப்பட்டனர். ஜிஎஸ்டிஆர் படிவங்கள் அனைத்தும் வாட் வரி விதிப்பு முறையில் இருந்த படிவங்களைக் காட்டிலும் முற்றிலும் வேறுவிதமாக இருந்ததால் அனைவரும் குழம்பிப் போயினர்.

ஜிஎஸ்டிஆர் படிவங்கள்
ஜிஎஸ்டிஆர் படிவங்கள் அனைத்தும் புரிந்துகொள்வதற்கு சிரமமாக இருந்தாலும் கூட வர்த்தகர்களும் தொழில் துறையினரும் ஆர்வ மிகுதியில் அனைவரும் குருட்டுப்பூனை இருட்டு அறையில் விட்டத்தில் பாய்ந்தது போல, போட்டி போட்டுக்கொண்டு தங்களின் ஜிஎஸ்டிஆர்-1, ஜிஎஸ்டிஆர்-2 மற்றம் ஜிஎஸ்டிஆர்-3பி படிவங்களை ஜிஎஸ்டி இணையதளத்தில் தாக்கல் செய்தனர்.

மாதாந்திர ஜிஎஸ்டிஆர்
வர்த்தகர்களும் தொழில் துறையினரும் தங்களின் மாதாந்திர ஜிஎஸ்டிஆர் படிவங்களை தாக்கல் செய்யத் தொடங்கியதால், ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி வருவாய் கூடிக்கொண்டே போனது. ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் 93,590 கோடி ரூபாயும், ஆகஸ்டு மாதத்தில் 93,029 கோடி ரூபாயும், செப்டம்பர் மாத வருவாய் 95,132 கோடி ரூபாயும் வசூலானது.

ஜிஎஸ்டி வரி வருவாய்
மாதாந்திர ஜிஎஸ்டிபடிவங்களை அனைத்து வர்த்தகர்களும் தொழில் துறையினரும் ஓரளவு புரிந்துகொண்டதால், பின்னர் வந்த மாதங்களில் சுதாரித்துக்கொண்டு தங்களின் மாதாந்திர ஜிஎஸ்டிஆர் படிவங்களை தாக்கல் செய்ததால், அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வருவாய் 85,931 கோடி ரூபாயும், நவம்பர் மாதத்தில் 83,716 கோடி ரூபாயும், டிசம்பர் மாத ஜிஎஸ்டி வரி வருவாய் 88,929 கோடி ரூபாயாகவும் சரிந்தது.

மாதந்திர படிவம் தாக்கல்
தற்போது ஜூலை முதல் டிசம்பர் வரையிலும் தாக்கல் செய்யப்பட்ட மாதாந்திர ஜிஎஸ்டிஆர் தரவுகளை நுணுக்கமாக ஆராய்ந்தபோது சுமார் 34,400 கோடி ரூபாய் அளவிற்கு குறைவாக வரி செலுத்தியது தெரியவந்துள்ளது. இறுதி ஜிஎஸ்டிஆர் படிவங்களின் படி, சுமார் 34 சதவிகித தொழில் துறையினர் தாக்கல் செய்துள்ள ஜிஎஸ்டிஆர்-3பி படிவங்களின் மூலம் செலுத்தி இருக்கவேண்டிய ஜிஎஸ்டி வரி சுமார் 8.50 லட்சம் கோடி ரூபாயாகும். ஆனால், மாதாந்திர ஜிஎஸ்டிஆர்-3பிபடிவங்களின் படி செலுத்தியுள்ள ஜிஎஸ்டி வரியானது சுமார் 8.16 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே.

சுத்தமா பொருந்தலையே
ஜூலை முதல் டிசம்பர் வரையிலும் தாக்கல் செய்துள்ள பூர்வாங்க ஜிஎஸ்டிஆர் படிவங்களை ஜிஎஸ்டி ஆணையம் ஆராய்ந்தபோது, சுமார் 16.36 சதவிகிதம் படிவங்கள் மட்டுமே இறுதிப் படிவங்களுடன் (Final Return) பொருந்தியுள்ளது தெரியவந்துள்ளது. அதன்படி அவர்கள் செலுத்தி உள்ள ஜிஎஸ்டி வரியானது சுமார் 22,014 கோடி ரூபாய் மட்டுமே. மீதம் உள்ள படிவங்களுக்கும் இறுதி ஜிஎஸ்டிஆர் படிவங்களுக்கும் சுத்தமாக பொருந்தவில்லை என்பது தெரியவந்துள்ளது.

ரூ. 6.50 லட்சம் கோடி
ஒட்டுமொத்தமாக, இறுதி ஜிஎஸ்டிஆர் படிவங்களை வருவாய் துறையினர் ஆராய்ந்தபோது, ஜிஎஸ்டி பதிவு செய்துள்ளவர்கள் சுமார் 51.96 சதவிகிதம் பேர். இவர்களில் சுமார் 49.36 சதவிகிதம் வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினர் தாக்கல் செய்துள்ள ஜிஎஸ்டிஆர்-1 படிவங்களின்படி அவர்கள் செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி வரியானது சுமார் 5.59 லட்சம் கோடி ரூபாய் ஆகும். ஆனால் இறுதி ஜிஎஸ்டி தரவுகளின்படி அவர்கள் அவர்கள் செலுத்தியுள்ள ஜிஎஸ்டி வரியானது சுமார் 6.50 லட்சம் கோடி ரூபாயாகும்.

அருண் ஜெட்லி
இந்த குழப்பங்களுக்கெல்லாம் தீர்வு காண்பதற்காக ஜிஎஸ்டி கவுன்சிலின் தலைவரும் நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி, அனைத்து உறுப்பினர்களுடனும் கடந்த மார்ச் 10ம் தேதி கலந்து பேசினார். இறுதியாக மீண்டும் அனைத்து ஜிஎஸ்டி தரவுகளையும் நுணுக்கமாக ஆராய்ந்து, அதில் உள்ள குழறுபடிகளை கண்டறிந்து, இறுதி ஜிஎஸ்டிஆர் படிவங்களுக்கும் ஜிஎஸ்டிஆர்-1 விற்பனை படிவங்கள் மற்றும் ஜிஎஸ்டிஆர்-3பியின்படி செலுத்திய நிகர வரிக்கும் உள்ள வேறுபாடுகளை கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய முடிவு செய்துள்ளனர்.

ஜிஎஸ்டிஆர் 3பி படிவம்
இதுபற்றி விளக்கமளித்த அபிஷேக் ஜெய்ன், ஜிஎஸ்டிஆர்-1 மற்றும் ஜிஎஸ்டிஆர்-3பி படிவங்களின் படி செலுத்தவேண்டிய நிகர வரியை கணக்கிடும்போது, கொள்முதல் மற்றும் விற்பனை திருப்பங்களையும் (Purchase & Sales Returns) கணக்கில் எடுத்துக்கொண்டு இறுதியாக ஜிஎஸ்டிஆர்-3பியின் படி செலுத்தவேண்டிய வரியை கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். அப்படி இல்லை என்றால் செலுத்தவேண்டிய நிகர வரியை கணக்கிடுவது சிரமமாகும் என்று தெரிவித்தார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications