5 மாதங்கள் பொருட்கள் வாங்கா விட்டாலும் ரேசன் கார்டு கட் ஆகாது - அமைச்சர் காமராஜ்
மூன்று மாதங்கள் அல்ல, 5 மாதங்கள் பொருட்கள் வாங்கவில்லை என்றாலும் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படமாட்டாது என்று தமிழக அமைச்சர் காமராஜ் சட்டசபையில் கூறியுள்ளார்.
சென்னை: மூன்று மாதங்களாகப் பொருட்கள் வாங்காமல் இருந்தால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் எனும் மத்திய அரசின் அறிவிப்பை தமிழக அரசு பின்பற்றாது என்று தெரிவித்துள்ளார் தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.
கடந்த ஜூன் 29ஆம் தேதியன்று டெல்லியில் மாநில உணவுத் துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், மூன்று மாதங்களுக்கு மேல் ரேஷன் பொருட்களை வாங்காத அட்டைதாரர்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தெரிவித்தார். இதன் மூலமாக, மானிய விலையில் உணவுப்பொருட்களை வாங்க வேண்டிய அவசியமில்லாதவர்களைக் கண்டறிந்து, அவர்களது ரேஷன் கார்டை ரத்து செய்ய முடியும் என்று கூறினார்.

இது தொடர்பாக, நேற்று தமிழக சட்டசபையில் திமுக உறுப்பினர் மா.சுப்பிரமணியம் கேள்வியெழுப்பினார். 3 மாதங்கள் தொடர்ந்து ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கவில்லை என்றால் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார். இதனை தமிழக அரசு பின்பற்றக் கூடாது என்று கோரிக்கை விடுத்தார். மூன்று மாதங்களாகப் பொருட்கள் வாங்காதவரின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பினால், பல ஊர்களுக்குச் சென்று தொழில் செய்வோர் பாதிக்கப்படுவர் என்று தெரிவித்தார்.
இந்தக் கேள்விக்கு, தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் பதிலளித்தார். மத்திய அமைச்சர் பஸ்வான் கூறியது அறிவுரை தான் என்றும், அது கொள்கை முடிவல்ல என்றும் கூறினார். மத்திய அரசின் இந்த அறிவிப்பை தமிழக அரசு பின்பற்றாது. மூன்று மாதங்கள் ரேஷன் பொருட்கள் வாங்கவில்லை என்றாலும், அதன்பின்னர் பொருட்கள் வழங்கப்படும். மூன்று மாதங்கள் அல்ல, 5 மாதங்கள் பொருட்கள் வாங்கவில்லை என்றாலும் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படமாட்டாது என்று தெரிவித்தார். அமைச்சர் காமராஜின் அறிவிப்பு பலருக்கும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications