தமிழகத்தில் காலை 5 மணிக்கு சுய ஊரடங்கு நிறைவு- மெல்ல திரும்பும் இயல்பு வாழ்க்கை
சென்னை: தமிழகத்தில் கொரோனா தாக்கத்தைத் தடுக்க கடைபிடிக்கப்பட்ட மக்கள் சுய ஊரடங்கு காலை 5 மணியுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை திரும்ப தொடங்கியுள்ளது.
Recommended Video
கொரோனாவை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் நேற்று காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை சுய ஊரடங்கை கடைபிடிக்க பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்று நாடு முழுவதும் பொதுமக்கள் சுய ஊரடங்கை கடைபிடித்தனர்.

இதனையொட்டி அனைத்து போக்குவரத்துகளும் ரத்து செய்யப்பட்டன. ஒட்டுமொத்தமாக தேசத்தின் இயல்பு வாழ்க்கையை பொதுமக்களே முடக்கிக் கொண்டனர். பின்னர் மாலை 5 மணியளவில் பெருநகரங்களில் மட்டும் மக்கள் ஒன்று கூடி, கொரோனாவுக்கு எதிராக போராடுவோருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் கைகளை தட்டி உற்சாகப்படுத்தினர். ஆனால் பெரும்பாலான இடங்களில் இதனை நடைமுறைப்படுத்தவில்லை.
Tamil Nadu: Central Government has announced a lockdown in Chennai along with 74 other districts affected by #Coronavirus, till 31st March. Visuals from Chennai's Ambattur OT. pic.twitter.com/Y0OizlZrId
— ANI (@ANI) March 23, 2020
மேலும் நேற்று இரவு 9 மணியுடன் சுய ஊரடங்கு பல மாநிலங்களில் நிறைவடைந்தது. தமிழகத்தில் இன்று காலை 5 மணி வரை சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. காலை 5 மணிக்கு சுய ஊரடங்கு நிறைவடைந்த நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப தொடங்கியது.
சென்னை உள்ளிட்ட நகரங்களில் அரசுப் பேருந்துகள் குறைவாக இயக்கப்பட்டன. சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கான பேருந்துகள் இயக்கப்படவில்லை. எல்லையோரங்களில் பிற மாநிலங்களுக்கு பேருந்துகள் அனுப்பப்பட்டாலும் அந்த மாநில எல்லைகள் வரைதான் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மத்திய அரசு சீல் வைக்க உத்தரவிட்ட சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications