படம் பார்க்கவா டெல்லியிலிருந்து வந்தீர்கள்...? மத்தியக் குழுவை மறிக்க முயன்ற மக்கள்..!
சென்னை: புயல் மற்றும் மழை வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய வந்த மத்தியக் குழு நேரடியாக கள ஆய்வு செய்யவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
நிவர் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளநீர் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. ஆயிரக்கணக்கான பேர் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து அரசு முகாம்களில் தங்கியுள்ளனர்.

சென்னையிலேயே இந்த நிலை என்றால் கடலூர், நாகை மாவட்டங்களை பற்றி சொல்லவே தேவையில்லை. அவ்வளவு பெரிய பாதிப்புகள் அங்கு ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் தென் சென்னை -வட சென்னையில் ஆய்வு செய்ய சென்ற மத்திய குழுவினர் நேரடியாக களத்திற்கு செல்லாமல் புகைப்படங்களை பார்த்துவிட்டு புறப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
சென்னை வேளச்சேரி, செம்மஞ்சேரி, சுனாமி குடியிருப்பு, உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட இடங்களையும், மக்களையும் பார்க்காமல் அறைக்குள் காட்சிப்படுத்தப்பட்ட புயல் சேத விளக்கப் படங்களை பார்த்துவிட்டு மத்திய குழு அதிகாரிகள் சென்றிருக்கின்றனர்.
இதனால் ஆவேசமடைந்த பாதிக்கப்பட்ட மக்கள் மத்திய குழு அதிகாரிகள் காரை மறித்து படம் பார்க்கவா டெல்லியில் இருந்து இங்கு வந்தீர்கள் என தங்கள் குமுறலை வெளிப்படுத்தினர். மொத்தம் 7 பேர் கொண்ட குழு வந்த நிலையில் தென் சென்னை- வட சென்னை என இரண்டு குழுக்களாக பிரிந்து ஆய்வுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
போக்குவரத்து வசதிமிக்க சென்னையிலேயே இந்த லட்சணத்தில் புயல் சேதங்களை ஆய்வு செய்கிறார்கள் என்றால் இன்னும் தண்ணீர் சூழ்ந்துள்ள கடலூர் போன்ற மற்ற உள் மாவட்டங்களில் எல்லாம் எப்படி ஆய்வு செய்வார்களோ என சுனாமி குடியிருப்பு பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications