Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம்
சென்னை: தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழும் சூழல் உருவாகி வருகிறது. குறிப்பாக நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) எந்த கூட்டணியில் இணையப் போகிறது என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதமாக மாறியுள்ளது. இந்நிலையில், தவெக பாஜகவை நோக்கி நகர்வதற்கான சிக்னல்கள் அதிகமாகத் தென்படத் தொடங்கி இருப்பதாகச் சொல்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகி வரும் சூழலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் என்ன முடிவெடுக்கப்போகிறது என்பது அரசியல் பார்வையாளர்களால் ஆர்வத்துடன் பார்க்கப்படுகிறது.
முன்னதாக காங்கிரஸ் கட்சி தங்களை நோக்கி வரலாம் என்ற எதிர்பார்ப்பு விஜய் தரப்பில் இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் காங்கிரஸ் மீண்டும் திமுக கூட்டணியிலேயே தொடர முடிவு செய்தது. இதனால் 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தனித்து போட்டியிடலாம் என சொல்லப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகம்
அதே நேரத்தில், தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிட்டால் அது வாக்கு பிரிவை ஏற்படுத்தி, இறுதியில் திமுக கூட்டணிக்கே சாதகமாக அமையும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதையும் பாஜக நன்கு உணர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது தவெக தலைவர் விஜயைச் சுற்றி அரசியல் மற்றும் தனிப்பட்ட ரீதியாக பல்வேறு அழுத்தங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெறுவது, ஜனநாயகன் திரைப்பட வெளியீடு தொடர்பான சிக்கல்கள், மேலும் குடும்ப விவகாரங்கள் ஆகியவை விஜய்க்கு கூடுதல் அரசியல் அழுத்தத்தை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் தவெக கூட்டணி
இதே நேரத்தில், தவெக தனித்துப் போட்டியிட்டால் அது எதிர்க்கட்சிகளின் வாக்குகளைப் பிரித்து இறுதியில் திமுகா தலைமையிலான கூட்டணிக்கே சாதகமாக மாறக்கூடும் என்ற அரசியல் கணக்கை பாஜக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தவெகவை தங்களது அணிக்கு இழுக்கும் முயற்சியில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
பாஜக தவெக கூட்டணி
ஏற்கனவே இரு தரப்பினருக்கும் இடையே திரைமறைவில் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகவும், அவை உடன்பாடின்றி முடிந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இறுதி முயற்சியாக பாஜக தரப்பு மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில், "பாஜக-வுடன் கூட்டணி அமைக்கலாமா?" என்ற யோசனை விஜய் தரப்பிலும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கசிகின்றன.
புஸ்ஸி ஆனந்த்
இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்க, தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் மாவட்டச் செயலாளர்களுடன் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆன்லைன் வாயிலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநாட்டில் அறிவிக்கப்பட்ட கட்சியின் கொள்கையைத் தொடர்ந்து தனித்துப் போட்டியிட்டு கட்சியின் பலத்தை நிரூபிப்பதா அல்லது தற்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு கூட்டணியில் சேர்வதா என்பது குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜகவுடன் கூட்டணி
மேலும், பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் ஏற்கெனவே அந்தக் கட்சியை "கொள்கை எதிரி" எனக் குறிப்பிட்ட நிலையில் பொதுமக்களிடம் என்ன விளக்கம் வழங்குவது என்ற கேள்வியும் கூட்டத்தில் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கூட்டணி விவகாரம் கட்சிக்குள் பெரிய விவாதமாக மாறியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜய் எடுக்கும் முடிவு
அதே நேரத்தில், கூட்டத்தில் பங்கேற்ற சில மாவட்டச் செயலாளர்கள், "புதிய கட்சி என்பதால் தற்போதைய சூழலில் தலைவருக்கும் கட்சிக்கும் தேவையற்ற நெருக்கடிகள் உருவாகாமல் இருக்க பாஜகவுடன் கூட்டணி அமைப்பது பாதுகாப்பான முடிவாக இருக்கலாம்" என்ற கருத்தையும் வெளிப்படையாக தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. எனினும் இறுதியில் விஜய் எடுக்கும் எந்த முடிவையும் கட்சியினர் ஏற்றுக்கொள்வோம் என்று மாவட்டச் செயலாளர்கள் உறுதி அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரகசியமாகச் சந்திப்பு
இதற்கிடையில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராக விஜய் டெல்லி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணைக்கு ஒரு நாள் முன்பாகவே டெல்லி சென்று ஹோட்டலில் தங்கியிருக்கும் விஜய், அங்கு பாஜக தேசியத் தலைவர்களை ரகசியமாகச் சந்தித்து ஆலோசனை நடத்தக்கூடும் என்ற தகவலும் அரசியல் வட்டாரங்களில் பரவி வருகிறது. அப்படியான சந்திப்பு நடந்தால், தவெக பாஜக கூட்டணியில் இணைய வாய்ப்பு அதிகரிக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதனால் நடிகர் விஜய் எடுக்கும் அடுத்த அரசியல் முடிவு தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
-
முத்தம் கொடுத்து விஜய் சொன்ன வார்த்தை..விஜய் தான் பெரிய நம்பிக்கை! தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ஓபன் டாக் -
சென்னையில் இருந்து புறப்பட்ட விஜய்.. திருச்சி கிழக்கு தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் -
‘கேமரா'வில் போட்டி.. வீரப்பன் மனைவிக்கு வாய்ப்பு..100 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த தவாக -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
ராயபுரத்தை கேட்ட ஆளூர் ஷாநவாஸ்.. டீலில் விட்டது ஏன்? திருமாவளவன் சொன்ன பாயிண்ட்! இதுதான் காரணம் -
தமன்னா வருவாங்களா சார்? சுந்தர்.சி களமிறக்க போகும் நட்சத்திர குரூப்! குஷ்பூவால் அடிக்கும் அதிர்ஷ்டம் -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
ஓஎஸ் மணியன் ஏமாற்றிவிட்டார்.. சீட் தராததால் அதிமுக சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ கட்சி பதவி ராஜினாமா! -
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு -
பெண்களின் திருமண வயது 21 ஆகும்.. மகளிர் அனைவருக்கு மாதம் ரூ.2000! ஆஃபர்களை அள்ளி வீசிய அன்புமணி! -
சுந்தர்.சி வேட்பாளர் ஆனதற்கு எதிர்ப்பு.. புதிய நீதி கட்சியின் அமைப்புச் செயலாளர் திடீர் விலகல்! -
கோவையை கைவிட்ட கம்யூனிஸ்டுகள்! தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாற்றிலேயே இப்படி நடப்பது இதுதான் முதல்முறை!












Click it and Unblock the Notifications