Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக பாஜக சார்பில் ஆக.29 முதல் செப்.17 வரை கபடி போட்டி- 234 தொகுதிகளிலும் வலை விரிக்கிறது!

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் அடுத்த மாதம் 29-ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 17-ம் தேதி வரை கபடி போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பாஜக காலூன்றுவதற்கான பல்வேறு முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. மேலும், திமுகவுக்கு மாற்று பாஜகதான் என்றும் கூறிக்கொண்டு, அரசின் நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்சித்து வருகிறது. அரசுக்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டங்களையும் நடத்தி, மக்கள் மனதில் இடம்பிடிக்க அக்கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Kabaddi tournament on behalf of Tamil Nadu BJP

மேலும் கட்சியை வலுசேர்க்கும் வகையில், தமிழகம் முழுவதும் புதிதாக இளைஞர்களை கட்சியில் இணைப்பது, மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுவது உள்ளிட்டவற்றின் மூலம் தமிழகத்தல் கட்சியை வளர்க்கும் பணிகளில் பாஜக நிர்வாகிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக, தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் 60 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்ட கபடி போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மேற்கொண்டு வருகிறது.

இதுதொடர்பாக, தமிழக பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவர் எஸ்.அமர் பிரசாத் ரெட்டி கூறியதாவது:
'மோடி கபடி லீக்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் கபடி போட்டிகளை நடத்த முடிவு செய்துள்ளோம். 5 ஆயிரம் அணிகள் இந்த போட்டிகளில் கலந்து கொள்கின்றன. 60 ஆயிரம் விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்த போட்டிகள் தேசிய விளையாட்டு தினமான ஆக. 29-ம் தேதி தொடங்கி பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளான செப்.17-ம் தேதி நிறைவடைய உள்ளது. இறுதிப் போட்டியை மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளோம். பரிசளிப்பு விழாவில், மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்தப் போட்டியில் மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்து வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம், 2-ம் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.25 ஆயிரம், 3-ம் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.15 ஆயிரம் பரிசுத் தொகையாக வழங்கப்படும். அதேபோல், மாநில அளவில் வெற்றி பெறும் அணிக்கு பரிசுத் தொகையாக ரூ.15 லட்சம், 2-ம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.10 லட்சம், 3-ம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.5 லட்சம் வழங்கப்பட உள்ளதாக எஸ்.அமர் பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+