சொத்து வாங்குவோருக்கு ஜாக்பாட்! இனி 20 லட்சம் வரை பான் கார்டு தேவையில்லை! மத்திய அரசின் புதிய ரூல்ஸ்
சென்னை: மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வருமான வரிச் சட்டத் திருத்தங்களின் தொடர்ச்சியாக, தற்போது சொத்து பரிமாற்றம் மற்றும் பத்திரப் பதிவு நடைமுறைகளில் மிக முக்கியமான மாற்றம் அமலுக்கு வந்துள்ளது.. குறிப்பாக சாமானிய மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் வீடு அல்லது நிலம் வாங்கும் போது எதிர்கொள்ளும் நடைமுறை சிக்கல்களைக் குறைக்கும் வகையில் இந்த சூப்பர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. அது என்ன தெரியுமா??
நம்முடைய இந்தியாவை பொறுத்தவரை, எந்தவொரு அசையாச் சொத்தையும் பதிவு செய்ய வேண்டும் என்றால், அதன் மதிப்பு எவ்வளவு இருந்தாலும் வாங்குபவர் மற்றும் விற்பவர் ஆகிய இருவருமே தங்களது நிரந்தர கணக்கு எண்ணை அதாவது பான் நம்பரை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.. இதுதான் தற்போதுள்ள நடைமுறையாகும்..

சொத்து வாங்குவோருக்கு ஜாக்பாட்
ஆனால், தற்போது மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, ரூ.20 லட்சம் வரை மதிப்புள்ள சொத்துக்களைப் பதிவு செய்வதற்கு பான் கார்டு எண் வழங்க வேண்டிய அவசியம் இனி கிடையாது..
இந்த மாற்றமானது குறிப்பாக கிராமப்புறங்கள் மற்றும் சிறு நகரங்களில் வசிக்கும் மக்களுக்குப் பெரும் நிம்மதியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. ஏனெனில், குறைந்த மதிப்புள்ள நிலங்களை வாங்கும் போது பான் கார்டு இல்லாத காரணத்தால் பல நேரங்களில் பத்திரப் பதிவு தாமதமாவது வாடிக்கையாக இருந்தது..
இப்போது இந்த வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதால், சாதாரண மக்கள் எவ்வித தடையுமின்றி தங்களது சொத்துப் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.. இருந்தாலும், ரூ.20 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள சொத்து பரிமாற்றங்களுக்கு பழைய நடைமுறையே தொடரும் என்பதும், அதற்கு பான் கார்டு விவரங்களைச் சமர்ப்பிப்பது கட்டாயம் என்பதும் குறிப்பிடத்தக்கது.. இந்த புதிய விதியின் கீழ் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 139A-ல் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன..
ரூ.20 லட்சம் பான் கார்டு
மேலும், பான் கார்டு இல்லாதவர்கள் தங்களது விவரங்களை உறுதிப்படுத்த படிவம் 60-ஐ சமர்ப்பிக்கும் நடைமுறை ஏற்கனவே புழக்கத்தில் உள்ளது.. ஆனால், இந்த புதிய உச்சவரம்பு அறிவிப்பு அத்தகைய கூடுதல் ஆவணப் பணிகளையும் பெருமளவு குறைக்கும் என்று கருதப்படுகிறது..
கறுப்புப் பண புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனைகளைக் கண்காணிக்கவும் பான் கார்டு முறை கடுமையாகப் பின்பற்றப்பட்டு வரும் நிலையில், சிறிய அளவிலான பரிமாற்றங்களுக்கு மட்டும் இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.. இதன் மூலம் ரியல் எஸ்டேட் துறையில் சிறிய அளவிலான முதலீடுகள் மற்றும் நில விற்பனைகள் வேகம் எடுக்கும் என்று துறை சார்ந்த நிபுணர்கள் கருதுகிறார்கள்.
நிலம் வாங்குவோருக்கு மத்திய அரசு குட் நியூஸ்
அரசாங்கத்தின் இந்த அதிரடி முடிவானது டிஜிட்டல் இந்தியா மற்றும் எளிதான வணிகம் ஆகிய இலக்குகளை நோக்கிய ஒரு பயணமாகப் பார்க்கப்படுகிறது.. அதே நேரத்தில், சொத்து வாங்குபவர்கள் மற்ற அடையாள ஆவணங்களான ஆதார் போன்றவற்றை வழக்கம்போல சமர்ப்பிக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை..
இந்த புதிய சலுகையைப் பயன்படுத்தி மக்கள் தங்களது நீண்ட கால கனவான வீடு மற்றும் நிலம் வாங்கும் கனவை எவ்வித கூடுதல் ஆவணச் சிக்கல்களும் இன்றி நிறைவேற்றிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.. இந்த விதிமுறை உடனடியாக அமலுக்கு வருவதால், இனி வரும் நாட்களில் பத்திரப் பதிவு அலுவலகங்களில் ரூ.20 லட்சத்திற்கு உட்பட்ட சொத்துக்களுக்கு பான் கார்டு கேட்கப்பட மாட்டாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது..!!!
-
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்!












Click it and Unblock the Notifications