டிசம்பர் 8 முதல் 11 வரை பள்ளிகளுக்கு விடுமுறை? மாண்டஸ் புயலின் பயோடேட்டாவை புட்டு வைத்த வெதர்மேன்
சென்னை: மாண்டஸ் புயலால் தமிழகத்தில் வரும் 8 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதிக்குள் ஒன்று அல்லது இரு நாட்களுக்கு விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்றைய தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதன் பிறகு டிசம்பர் 7ஆம் தேதி அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையும்.
இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக கடலோரத்தில் புயலாக மாறும். இந்த வடகிழக்கு பருவமழை சீசனின் முதல் புயல் இதுவாகும். இதற்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு நாடுகள்
இந்த பெயரை ஐக்கிய அரபு நாடுகள் பரிந்துரை செய்தது. உலக வானிலை மையத்தின் தலைவராக உள்ள அப்துல்லா அகமது அல் மாண்டஸ் அந்த நாட்டை சேர்ந்தவர். வானிலையியலில் பிஎச்டி முடித்துள்ள அவரை கவுரவிக்கும் விதமாக இந்த பெயரை அந்த நாடு வைத்துள்ளது. கடந்த முறை போல் காற்றழுத்தமாகவே கரையில் காணாமல் போகாது.

நிச்சயம் புயல்
இந்த முறை நிச்சயம் புயலாக மாறி மழையை தரும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

அதி கனமழை
அது போல் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் 8 ஆம் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மாண்டஸ் புயல் கவ்வும் இடம் வடதமிழக கடலோரத்தில் அதாவது கடலூர் டூ பழவேற்காடு இடையே.

மழை பெய்யாமல் இருக்க வாய்ப்பிருக்கா
நாகை முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, நெல்லூர் வரை மழை பெய்யும். மழை பெய்யாமல் இருக்கும் வாய்ப்பு 1 முதல் 10 சதவீதம் மட்டுமே உள்ளது. வடதமிழக கடலோரத்திற்கு ரெட் அலர்ட் விடுக்க 80 முதல் 90 சதவீதம் வரை வாய்ப்புள்ளது. காற்றின் வேகம் ஸ்ஸ்ஸ் முதல் உஸ்உஸ்உஸ்ஸ்ஸ்ஸ்ஸ என வீசும். அதற்காக தானே அல்லது வர்தா அல்லது கஜா புயல் ரேஞ்சுக்கு இப்போதைக்கு கம்பேர் செய்து கொள்ள வேண்டாம்.

நிவர் புயல் போல் காற்று
நிவர் புயல் போல் மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசும். மாண்டஸ் புயலின் எதிரிகள் - கரை பக்கத்தில் வறண்ட காற்று மற்றும் அதிக காற்றின் வேகம். ஆனால் நடு கடலில் மட்டும் மாண்டஸுக்கு எதிரிகளே இல்லை. நண்பர்கள் யார் என்றால் எம்ஜேஓ மற்றும் கடல் வெப்ப நிலை ஆகியவைதான். டெல்டா அருகே மாண்டஸ் கரையை கடக்க வாய்ப்பு குறைவு. இந்த புயல் ஆக்டிவ்வாக இருக்கும் தேதி டிசம்பர் 8 முதல் 11 வரை. இந்த மூன்று நாட்களில் ஒன்று அல்லது இரு நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறைக்கு வாய்ப்புள்ளது என வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

குளிர்ந்த காற்று
பெரும்பாலான இடங்களில் அதாவது கடலோர பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. நாகை முதல் கடலூர் வரை காற்றழுத்தத்தின் வேலையை கடும் குளிர் மூலம் காட்டத் தொடங்கியுள்ளது என நெட்டிசன்கள் தெரிவித்துள்ளார்கள். கடந்த முறையை போல் இந்த முறை புயல் புஸ்வானம் ஆகிவிடாது என்பதையும் தமிழ்நாடு வெதர்மேன் தெளிவாக கூறியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications