தமிழக அரசியலில் சஸ்பென்ஸ் உடைகிறது.. திமுக, அதிமுகவிற்கு காத்திருக்கும் ட்விஸ்ட்
சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்றத் தேர்தல் என்பது வெறும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்கான களமாக மட்டுமில்லை.. அது அதிகாரப் பகிர்வு மற்றும் இருப்புக்கான போராட்டமாக இருக்கிறது. வழக்கமாக தேர்தல் நெருங்கும் போது தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தங்களது கூட்டணிகளை ஓரளவு இறுதி செய்துவிடும். ஆனால், இன்று நிலைமை தலைகீழாக இருக்கிறது. ஒருபுறம் ராமதாஸ், மறுபுறம் பிரேமலதா விஜயகாந்த். இந்த இருவரின் 'சிக்னலுக்காக' அறிவாலயமும், எடப்பாடியார் இல்லமும் காத்திருக்கிறது. இதுதான் தமிழக அரசியலின் தற்போதைய எதார்த்தம்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தங்களது களப்பணியை தீவிரப்படுத்தி இருக்கினறன. ஏப்ரல் 3-வது வாரத்தில் சட்டசபை தேர்தல் நடக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர், த.வெ.க. என 4 முனை போட்டி இருக்கலாம் என்ற கருத்து உருவாகியுள்ளது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

அதிமுக கூட்டணி
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க. (அன்புமணி), அ.ம.மு.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. புதிதாக களத்துக்கு வந்துள்ள விஜய் தலைமையிலான த.வெ.க.வும் ஒரு கூட்டணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் யாரும் இதுவரை கூட்டணியில் இணையவில்லை. நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது.
இத்தகைய சூழ்நிலையில் எந்த கூட்டணியில் சேரலாம் என்ற யோசனையில் தே.மு.தி.க., பா.ம.க. (டாக்டர் ராமதாஸ்), புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இருக்கின்றன இந்த கட்சிகள் இன்னும் தங்கள் முடிவை அறிவிக்கவில்லை. முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பாஜக கூட்டணியில் சேருவாரா அல்லது என்ன முடிவெடுக்க போகிறார் என்பது தெரியவில்லை.
மறைமுக பேச்சுவார்த்தை
தே.மு.தி.க., பா.ம.க. (டாக்டர் ராமதாஸ்) ஆகிய கட்சிகளை தங்கள் அணியில் இணைத்துக்கொள்ள மறைமுக பேச்சுவார்த்தையை தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. ஆகிய கட்சிகள் தொடங்கி இருக்கின்றன. டாக்டர் ராமதாசும், பிரேமலதாவும் தங்களது நிலைப்பாட்டை அறிவிக்காததால், இருபெரும் கட்சிகளாக தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தங்களது கூட்டணியை இறுதி செய்யாமல் இருந்து வருகின்றன.
கூட்டணி கணக்கு
தேர்தல் அறிக்கை குழு, பிரசார குழுக்களை தி.மு.க., அ.தி.மு.க. அறிவித்தபோதிலும் கூட்டணியை இறுதி செய்யவில்லை. மேற்கண்ட அந்த கட்சிகள் எடுக்கும் முடிவை பொறுத்து கூட்டணியை இறுதி செய்ய தி.மு.க, அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது.
ராமதாஸ் நிலைப்பாடு
இதில் பா.ம.க.வைப் பொறுத்தவரை, கடந்த காலங்களில் அவர்கள் எடுத்த முடிவுகள் தேர்தலின் திசையையே மாற்றி இருக்கின்றன. 2026-ல் பா.ம.க.வின் பலம் என்பது வன்னியர் வாக்கு வங்கி மட்டுமல்ல, வட மாவட்டங்களின் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக இருந்து வருகிறது. அன்புமணி அதிமுக கூட்டணியில் இருப்பதால், அவர் திமுக கூட்டணியில் இணைவாரா என்ற கேள்வி எழுத்ள்ளது. ராமதாஸ் இன்னும் மௌனம் காக்கிறார். அவரது முடிவு காரணமாக திமுக இன்னும் கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் இருக்கிறதாம்.
பிரேமலதாவின் நிலைப்பாடு
கேப்டன் விஜயகாந்தின் மறைவுக்குப் பிறகு தே.மு.தி.க.வின் எதிர்காலம் கேள்விக்குறியான போது, அதைத் தைரியமாக வழிநடத்தி வருகிறார் பிரேமலதா. விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அவரது மகன் விஜய பிரபாகரன் வெற்றிக்கோட்டிற்கு அருகில் வந்து தான் தோல்வியை தழுவினார். பல தொகுதிகளில் கணிசமான செல்வாக்கு உள்ளது. அதிக சீட்டை பிரேமலதா கேட்டு வருகிறாராம். அனேகமாக அவர் திமுக உடன் செல்லவே வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. எனினும் அதிமுகவும் தங்கள் பக்கம் வருவார் என்று நம்புகிறது. இதனால் திமுகவும் கூட்டணியை இறுதிய செய்வதை தாமதம் செய்து வருகிறது.
தொகுதி பங்கீடு பேச்சு எப்போது?
கூட்டணியை இறுதி செய்த பிறகே, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக, அதிமுக நடத்த போகின்றன. தி.மு.க.வில் காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தள்ளி போய் கொண்டேஇருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு குறைவான தொகுதிகளே தர வேண்டும் என்று திமுகவினர் போர்க்கொடி உயர்த்தி வருகிறார். மறுபுறம் அதிமுக கூட்டணியை பொறுத்தவரை இந்த முறை நிறைய தொகுதிகளை அதிமுகவிடம் வாங்க வேண்டும் என்று பாஜகவினர் போர்க்கொடி உயர்த்தி வருகிறார்கள். இதனால் இன்னமும் அ.தி.மு.க.விலும் அதிகாரப்பூர்வமாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை. அனேகமாக அடுத்த வாரம் கூட்டணிகள் முடிவாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சொத்து பறிமுதல் ரத்து.. அமலாக்கத்துறை வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
கொங்குவில் உடையும் அதிமுக கோட்டை.. 4 மண்டலங்களிலும் திமுக தான் ‘டாப்' - கருத்து கணிப்பு ரிசல்ட் -
வில்லிவாக்கம் தொகுதி திமுக பொறுப்பாளர்கள் கூட்டத்தில், மனைவியுடன் பங்கேற்ற ஸ்டாலின் மருமகன் சபரீசன் -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு -
"செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிட காரணம் இதுதான்" - பிரச்சாரத்தில் ஓப்பனாக சொன்ன முதல்வர் ஸ்டாலின் -
சுந்தர்.சி வேட்பாளர் ஆனதற்கு எதிர்ப்பு.. புதிய நீதி கட்சியின் அமைப்புச் செயலாளர் திடீர் விலகல்!












Click it and Unblock the Notifications