3வது அலை எப்போது உச்சம் அடையும்? வேக்சின் எப்படி வேலை செய்கிறது? டாக்டர் ராம் கோபாலகிருஷ்ணன் பேட்டி
சென்னை: அக்டோபரில் 3வது அலை உச்சமடையும் வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக நோய் தொற்று நிபுணர் டாக்டர் ராம் கோபாலகிருஷ்ணன் பிரபல தமிழ் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், கொரோனா எந்த தேதியில் உச்சமடையும் என்று சொல்ல முடியாது. ஒன்று நாங்கள் கற்றுக்கொண்ட கொரோனா பற்றி, முன்கூட்டியே கணிப்பது மிகவும் கடினம்.
ஜனவரி பிப்ரவரியில் யார் எதிர்பார்த்தார்கள் இரண்டாவது அலை வரும் என்று? அதுவும் ஏப்ரல் மே மாதங்களில் வரும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். கொரோனா இந்த மாதம், இந்த வருடம், வரும் என சொல்ல முடியாது. ஆனால் மூன்றாவது அலை வரும் என்பதை உறுதியாக சொல்ல முடியும். ஏனெனில் கொரோனா மரபணுக்கள் மாறிக்கொண்டே வருகிறது.
போன வருசம் வந்தது வூகான் வைரஸ். இந்த முறை வந்தது டெல்டா வைரஸ். டெல்டா வைரஸ் மாறிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு முறையும் கொரோனா மல்டிபில் ஆகும் போது கொஞ்சம் மாறும். மரபணு மாற்றம் அடையும்- அதன் காரணமாக ஏற்கனவே உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும். கொரோனா மரபணு மாறுவதால் இப்போது மக்களிடம் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி வேலை செய்யுமா செய்யாதா அல்லது தடுப்பூசிகள் வேலை செய்யுமா செய்யாதா என்பதை சொல்ல முடியாது.

மூன்றாவது அலை வராது
இப்போது உள்ள நோய் எதிர்ப்பு சக்தி, தடுப்பு மருந்துகள், தடுப்பூசிகள், அடுத்து வரும் கொரோனா வெர்சனுக்கு ஓரளவுக்குத்தான் வேலை செய்யும் என நிறையபேர் எதிர்பார்க்கிறார்கள். கட்டாயம் மூன்றாவது அலை வரும். எவ்வளவு தடுப்பூசி போடுகிறோமோ அந்த அளவிற்கு நல்லது. இந்தியாவில் 2021 டிசம்பருக்குள் எல்லோருக்கும் தடுப்பூசியை கொடுத்தால் மூன்றாவது அலை 2021ல் வர வாய்ப்பு மிக குறைவு.

இன்புளுயன்ஸா
இந்தியா ஏற்கனவே முதல் அலை, 2வது அலை என இரண்டு கொரோனா அலைகளை பார்த்துள்ளது. 3வது அலை மற்ற அலைகளில் இருந்து எந்த வகையில் வித்தியாசப்படும் என்று கேட்கிறீர்கள், வைரஸ் மாறிக்கொண்டே இருக்கும். மாறிய வைரஸ்க்கு மேல் புது வேக்சின் கொண்டுவர வேண்டும். ஏனெனில் வைரஸ்கள் மாறிக்கொண்டே வரும். எப்படி இன்புளுயன்ஸா வைரஸ்க்கு ஒவ்வொரு வருடம் தடுப்பூசி போடுகிறோம். ஒவ்வொரு வருடமும் புது வேக்சின் போடுகிறோம். அதாவது போன வருடம் வந்த இன்புளுயன்ஸாவைவிட மாறி வேக்சின் போடுகிறோம். அதுகூட கொரோனாவிற்கு கொண்டுவந்தாலும், அதைவிட சிறப்பான வேக்சின் தேவை.

ஊசி வேக்சின்
தற்போது கொடுக்கும் வேக்சின் எல்லாம் ஊசி போடுவது மாதிரியான வேக்சின் ஆகும். இதேவேக்சினை மூக்கு வழியாக கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டியதிருக்கும். எந்த அளவிற்கு அறிவியலை பயன்படுத்தி வேக்சின் கொண்டுவருகிறோமோ அதுநல்லது. தற்போதைய நிலையில் வேக்சின் நல்லது. யாரு வேக்சின் போடலையோ, அவங்க கட்டாயம் வேக்சின் போடுங்க..
இந்தியாவில் தற்போது உள்ள கோவேக்சின், கோவிஷீல்டு போன்ற தடுப்பூசிகள் அதிகமாக இருக்கிறது. இவை மூன்றாவது அலையில் இருந்து மக்களை காக்க உதவுமா என்று கேட்கிறீர்கள். நிச்சயமாக தடுக்கும். தடுப்பூசி போட்டால் ஒவ்வொரு தடுப்பூசிக்கும் பலன் உண்டு. முதலில் நோய் பாதிப்பு வராமல் தடுப்பது, நோய் பாதிப்பு வந்தாலும் மென்மையாக இருந்துவிட்டு செல்வது, மூன்றாவது மருத்துவமனையில் சேர்வதை தடுப்பது, 4வது நோய் பாதித்தாலும் உயிரை காப்பாற்றுவது போன்ற வேலைகளை தடுப்பூசிகள் செய்யும். உயிரை காப்பாற்றவும், மருத்துவமனையில் சேர்வதை தடுப்பதற்கும் வேக்சின்கள் பக்காவாக வேலை செய்கிறது.
Recommended Video

நன்றாக வேலை செய்யும்
தடுப்பூசி போட்டாலும் கொரோனா வரலாம் .இரண்டு மூன்று நாளில் மென்மையான பாதிப்பை கொடுத்துவிட்டு சென்றுவிடும். எனவே தடுப்பூசிகளை உயிரை காப்பாற்றும் வேக்சின் என்று நிச்சயம் சொல்லலாம். இப்போது கண்டுபிடித்துள்ள எம்ஆர்ஐ வேக்சின், டெல்டா வேரியண்டுக்கு நன்றாகவே வேலை செய்கிறது. அமெரிக்காவை போல் இந்தியாவிலும் பூஸ்டர் டோஸ் தேவை. எல்லோருக்கும் கொண்டுவருவது நல்லது" இவ்வாறு கூறினார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications