கோவை கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி.. உருவாகும் மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு.. ஸ்டாலின் அதிரடி
சென்னை: கோவை கார் வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக தமிழகத்தில் பிரத்யேகமாக மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து காவல்துறை உயரதிகாரிகளுடன் தமிழக மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்திய பிறகு, மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு தொடங்கப்படும் என அறிவித்திருந்தார்.
இந்தப் பிரிவு அமைக்கப்பட்ட பிறகு தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிர்வை ஏற்படுத்திய கோவை கார் வெடிப்பு..
கோவையில் உள்ள உக்கடம் பகுதியில் கடந்த மாதம் கார் சிலிண்டர் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் அந்த காரை ஓட்டிச் சென்ற ஜமோசா முபின் என்பவர் பலியானார். இதனிடையே, கார் வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் ஆணி, கோலிக்குண்டுகள் கண்டறியப்பட்டதால் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

களமிறங்கிய என்ஐஏ
இதன்பேரில், முபின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 75 கிலோ வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக முபினின் உறவினர்கள், நண்பர்கள் என 6 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர், இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் (என்ஐஏ) ஒப்படைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, நேற்று தமிழகம் முழுவதும் 42 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், இந்த கார் வெடிப்பு சம்பவமானது ஒரு தீவிரவாத தாக்குதல் சதி என்றும் என்ஐஏ அதிகாரிகள் அறிவித்தனர்.

அடையாளம் காணப்பட்ட 90 பேர்
இந்த சூழலில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 102 பேர் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு பட்டியல் அளித்தது. இதனைத்தொடர்ந்து, அவர்களில் 90 பேரை போலீஸார் அடையாளம் கண்டு போலீஸார் ரகசிய விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணை சில தினங்களுக்கு முன்பே நிறைவடைந்தது. இதில் பல முக்கிய தகவல்கள் கிடைத்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தனர்.

தீவிரவாத தடுப்புப் பிரிவு..
இந்நிலையில், தமிழகத்தில் பிரத்யேகமாக மாநிலத் தீவிரவாத தடுப்புப் பிரிவை தொடங்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர். காவல்துறை கூடுதல் இயக்குநர் அல்லது ஐஜி தலைமையில் இந்தப் பிரிவு அமைக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தடை செய்யப்பட்ட இயக்கங்கள், தீவிரவாத அமைப்புகள் ஆகியவற்றுடன் தொடர்பில் இருப்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதே இந்தப் பிரிவின் முதன்மையான பணி எனக் கூறப்படுகிறது.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி












Click it and Unblock the Notifications