8 நாட்களாக மருத்துவமனையில் கிடக்கும் கள்ளக்குறிச்சி மாணவியின் உடல்.. தீவிர போலீஸ் பாதுகாப்பு!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் உயிரிழந்த மாணவியின் உடல் மறுபிரேத பரிசோதனைக்கு பிறகும் மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த 17 வயது மாணவி இறந்துவிட்டார். இவரது உடலுக்கு கடந்த 14 ஆம் தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது.
இந்த பரிசோதனை முடிவுகள் தெரியும் வரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர் தெரிவித்தனர். இதையடுத்து அடுத்த நாள் மாணவியின் பெற்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

பரிசோதனை முடிவு
பின்னர் 16 ஆம் தேதி பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகின. எனினும் மாணவியின் உடலை பெற்றோர் வாங்கவில்லை. இந்த நிலையில் 17 ஆம் தேதி தனியார் பள்ளியில் கலவரம் நடந்தது. பள்ளியின் பேருந்துகள், உடைமைகள், தீவைத்து கொளுத்தப்பட்டன. இதையடுத்து 18ஆம் தேதி மாணவியின் பெற்றோர் தாக்கல் செய்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரித்தது.

4 மருத்துவர்கள்
இதையடுத்து 4 மருத்துவர்கள் கொண்ட ஒரு குழுவை உருவாக்கி மறுபிரேத பரிசோதனை செய்ய 19 ஆம் தேதி நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் தங்கள் தரப்பு மருத்துவரையும் அந்த பிரேத பரிசோதனையின் போது அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மாணவியின் தந்தை மேல்முறையீடு செய்தார்.

பிரேத பரிசோதனை
எனினும் உயர்நீதிமன்ற உத்தரவின்படி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 19ஆம் தேதி மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மறுபிரேத பரிசோதனையில் பங்கேற்க முன்கூட்டியே மருத்துவமனையின் டீன் மாணவியின் பெற்றோருக்கு கடிதம் அனுப்பி வைத்தும் அவர்கள் வரவில்லை. இதையடுத்து மாணவியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டது.

மனு மீது விசாரணை
மாணவியின் தந்தை மனு மீது விசாரணை உச்சநீதிமன்றத்தில் நேற்று நடந்த நிலையில் தள்ளுபடியானது. இந்த நிலையில் மாணவியின் உடலை அவரது பெற்றோர் பெற்றுச் செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மாணவியின் உடலை பெற்றுச் செல்ல உத்தரவிடக் கோரி காவல் துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. கடந்த 8 நாட்களாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாணவியின் உடல் வைக்கப்பட்டுள்ளது. மாணவியின் உடல் வைக்கப்பட்டுள்ள இடத்தில் கள்ளக்குறிச்சி போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications