உலக நாடுகளிடம் இருந்து குவியும் மருத்துவ உதவிகள்.. 92 ஆக்சிஜன் செறியூட்டிகளை அனுப்பிய டென்மார்க்
டெல்லி: பல்வேறு நாடுகளிடம் இருந்து பெறப்பட்ட 11,325 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 15,801 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 6.1 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகளை நாட்டிலுள்ள பல மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரசின் 2ஆம் அலை தற்போது இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. முதல் அலையுடன் ஒப்பிடும்போது 2ஆம் அலையின் பாதிப்பு அதி தீவிரமாக உள்ளது. பல மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.
கொரோனா உயிரிழப்புகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. அதேபோல மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமலும் ஆக்சிஜன் கிடைக்காமலும் உயிரிழந்த நிகழ்வுகளும் நடந்தன.

உலக நாடுகள் உதவி
கொரோனா 2ஆம் அலையால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உதவ பல்வேறு நாடுகளும் முன்வந்துள்ளன. அதன்படி கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி முதல் பல்வேறு நாடுகளும் இந்தியாவுக்கு மருத்துவ பொருட்களை அனுப்பி வருகின்றன. உலக நாடுகளின் உதவிகளை சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிற இந்தியா ஏற்றுக்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

மத்திய அரசு அறிக்கை
இந்நிலையில், இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக நாடுகளிடம் இருந்து பெறப்படும் மருத்துவ உதவி பொருட்களை மாநிலங்களுக்கு விரைவாக வழங்க பல அமைச்சகங்களும் துறைகளும் ஒருங்கிணைந்து இயக்கி வருகின்றன. இதுவரை உலக நாடுகளிடம் இருந்து 11,325 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 15,801 ஆக்சிஜன் சிலிண்டரகள், 19 ஆக்ஸிஜன் உற்பத்தி பிளான்டுகள் பெறப்பட்டுள்ளன.

எந்தெந்த நாடுகள்
மேலும், 8526 வென்டிலேட்டர்கள், 6.1 ரெம்டெசிவிர் குப்பிகளை இந்தியா பெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம் என பல்வேறு நாடுகளும் இந்தியாவுக்கு மருத்துவ பொருட்களை அனுப்பியுள்ளன. இந்த மருத்து பொருட்கள் தேவைக்கு ஏற்ப மாநிலங்களுக்கு முறையாக விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டென்மார்க் உதவி
குறிப்பாகக் கடந்த வாரம் தான் பிரிட்டன் நாட்டிலிருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களும், செறிவூட்டிகளும் அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில், இன்று மற்றொரு ஐரோப்பிய நாடான டென்மார்க்கிடம் இருந்து 92 ஆக்சிஜன் செறிவூட்டிகளை இந்தியா பெற்றுள்ளது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications