உலக நாடுகளிடம் இருந்து குவியும் மருத்துவ உதவிகள்.. 92 ஆக்சிஜன் செறியூட்டிகளை அனுப்பிய டென்மார்க்
டெல்லி: பல்வேறு நாடுகளிடம் இருந்து பெறப்பட்ட 11,325 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 15,801 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 6.1 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகளை நாட்டிலுள்ள பல மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரசின் 2ஆம் அலை தற்போது இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. முதல் அலையுடன் ஒப்பிடும்போது 2ஆம் அலையின் பாதிப்பு அதி தீவிரமாக உள்ளது. பல மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.
கொரோனா உயிரிழப்புகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. அதேபோல மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமலும் ஆக்சிஜன் கிடைக்காமலும் உயிரிழந்த நிகழ்வுகளும் நடந்தன.

உலக நாடுகள் உதவி
கொரோனா 2ஆம் அலையால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உதவ பல்வேறு நாடுகளும் முன்வந்துள்ளன. அதன்படி கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி முதல் பல்வேறு நாடுகளும் இந்தியாவுக்கு மருத்துவ பொருட்களை அனுப்பி வருகின்றன. உலக நாடுகளின் உதவிகளை சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிற இந்தியா ஏற்றுக்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

மத்திய அரசு அறிக்கை
இந்நிலையில், இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக நாடுகளிடம் இருந்து பெறப்படும் மருத்துவ உதவி பொருட்களை மாநிலங்களுக்கு விரைவாக வழங்க பல அமைச்சகங்களும் துறைகளும் ஒருங்கிணைந்து இயக்கி வருகின்றன. இதுவரை உலக நாடுகளிடம் இருந்து 11,325 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 15,801 ஆக்சிஜன் சிலிண்டரகள், 19 ஆக்ஸிஜன் உற்பத்தி பிளான்டுகள் பெறப்பட்டுள்ளன.

எந்தெந்த நாடுகள்
மேலும், 8526 வென்டிலேட்டர்கள், 6.1 ரெம்டெசிவிர் குப்பிகளை இந்தியா பெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம் என பல்வேறு நாடுகளும் இந்தியாவுக்கு மருத்துவ பொருட்களை அனுப்பியுள்ளன. இந்த மருத்து பொருட்கள் தேவைக்கு ஏற்ப மாநிலங்களுக்கு முறையாக விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டென்மார்க் உதவி
குறிப்பாகக் கடந்த வாரம் தான் பிரிட்டன் நாட்டிலிருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களும், செறிவூட்டிகளும் அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில், இன்று மற்றொரு ஐரோப்பிய நாடான டென்மார்க்கிடம் இருந்து 92 ஆக்சிஜன் செறிவூட்டிகளை இந்தியா பெற்றுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications