Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முப்படைகளுடம் இணைந்து தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்வோம்: புதிய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே சூளுரை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாட்டின் முப்படைகளும் இணைந்து தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்று புதிய ராணுவ தளபதியாக பொறுப்பேற்றுள்ள மனோஜ் பாண்டே உறுதி அளித்துள்ளார்.

Recommended Video

    Indias New Army Chief ஆக Manoj Pandey பொறுப்பேற்பு | OneIndia Tamil

    நாட்டின் 28-வது ராணுவ தளபதியான முகுந்த் நரவனே பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதனையடுத்து புதிய ராணுவ தளபதியாக மனோஜ் பாண்டே பொறுப்பேற்றார்.

    1965-ம் ஆண்டு பிறந்த நாக்பூரைச் சேர்ந்த மனோஜ் பாண்டே, 1982-ம் ஆண்டு முதல் ராணுவத்தின் பொறியியல் பிரிவில் பணியாற்றினார். பின்னர் லடாக் எல்லை, அந்தோமான் நிக்கோபர் பிராந்திய தளபதியாகவும் மனோஜ் பாண்டே பணிபுரிந்தவர். சில மாதங்களுக்கு ராணுவத்தின் துணை தளபதியாக நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில் ராணுவ தளபதி முகுந்த் நரவனே ஓய்வு பெற்றதால் தற்போது மனோஜ் பாண்டே புதிய ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். மனோஜ்பாண்டேவிடம் தனது பொறுப்புகள் அனைத்தையும் முகுந்த் நரவனே ஒப்படைத்தார். ராணுவ தளபதியாக பொறுப்பேற்ற மனோஜ் பாண்டே ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

    இதனிடையே புதிய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே கூறியிருப்பதாவது: புவிசார் அரசியல் சூழ்நிலைகள் படிப்படியாக மாறி வருகின்றன. நம் முன்னர் ஏராளமான சவால்கள் உள்ளன. எந்த ஒரு சவாலான நிலைமையையும் எதிர்கொள்வது என்பது இந்திய ராணுவத்தின் கடமை. எனக்கு முன்னைய ராணுவ தளபதிகள் மேற்கொண்டிருந்த பணிகளை முன்னெடுத்து செல்வேன்.

     All three forces will work together for Nations Security: Army Chief General Manoj Pande

    கப்பல்படை, விமானப் படை ராணுவ தளபதிகளை நான் நன்கு அறிவேன். முப்படைகளும் ஒருங்கிணைந்து சவால்களை எதிர்கொள்வோம். நாட்டின் பாதுகாப்பை முப்படைகளும் இணைந்து உறுதி செய்வோம். நாட்டின் ராணுவ தளபதியாக பொறுப்பேற்றிருப்பதை பெருமைக்குரிய தருணமாக கருதுகிறேன். இவ்வாறு மனோஜ் பாண்டே கூறினார்.

    ராணுவ தளபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற நரவனே, முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்படக் கூடும் என கூறப்படுகிறது. முப்படைகளின் தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் கடந்த ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து புதிய தலைமை தளபதியாக முகுந்த் நரவானே நியமிக்கப்படலாம் என்கின்றன டெல்லி தகவல்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+