இது திட்டமிட்ட செயல்.. உறவில் பெரும் விரிசல் வரும்.. சீன வெளியுறவு அமைச்சரிடம் ஜெய்சங்கர் வார்னிங்!
டெல்லி: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்- சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோர் தொலைபேசியில் பேசினார்கள். கிழக்கு லடாக்கின் நிலைமை குறித்து இரு நாட்டு அமைச்சர்களும் விவாதித்தனர். அப்போது சீன ராணுவத்தின் திட்டமிட்ட நடவடிக்கையால் இந்த சம்பவம் நடந்திருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
Recommended Video
கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் செவ்வாய்கிழமை அதிகாலை வரை இந்தியா மற்றும் சீன ராணுவத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 22 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். இருவரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
சீன தரப்பில் 35 பேர் வரை இறந்திருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சீன ராணுவம் உயிரிழப்பு மற்றும் காயம் குறித்து எந்த ஒரு அறிவிக்கையும் இது வரை வெளியிடவில்லை.

தொலைப்பேசியில் பேச்சு
அதேநேரம் இந்திய வீரர்கள் தான் அத்துமீறி முதலில் தாக்குதல் நடத்தியதாக அபாண்டமாக பழி போட்டது. எனினும் இந்தியாவடன் மோதலை தொடர விரும்பவில்லை என்றும் பேச்சுவார்த்தை மூலம் அமைதியை ஏற்படுத்த விரும்புவதாகவும் சீனா அறிவித்தது. இதையடுத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியிடம் தொலைப்பேசியில் பேசினார்.

கண்டிப்புடன் எடுத்துரைத்தார்
இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திகுறிப்பில், "வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியிடம் பேசும் போது, கல்வான் பள்ளத்தாக்கில் இது சீன ராணுவத்தால் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட நடவடிக்கை, திட்டமிட்ட நடவடிக்கைகளே இந்த மோதல் சம்பவங்களுக்கு காரணம். இதற்கு சீனா தான் பொறுப்பு என்று கண்டிப்புடன் எடுத்துரைத்தார்.

படைகளை விலக்க ஒப்புதல்
ஒட்டுமொத்த நிலைமை பொறுப்பான முறையில் கையாளப்படும் என்று இந்தியா சீனா இரு தரப்பும் ஒப்புக்கொள்வது என பேசிக்கொண்டனர். அத்துடன் இரு தரப்பும் ஜூன் 6 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட படைகளை விலக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நேர்மையாக செயல்படுத்த வேண்டும் என்றும் ஒப்புக்கொண்டனர்.

காலத்தின் தேவை அவசியம்
முன்னெப்போம் இல்லாத இந்த மோதல், இருதரப்பு உறவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வெளியுறத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீன அமைச்சரிடம் அடிக்கோடிட்டுக் காட்டினார். சீன தரப்பு அதன் நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்வதற்கும் சரியான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் காலத்தின் தேவை உள்ளது

எல்லையை மதிக்க வேண்டும்
ஜூன் 6 ம் தேதி மூத்த தளபதிகள் எட்டிய புரிந்துணர்வை இரு தரப்பினரும் நேர்மையாகவும் உண்மையாகவும் செயல்படுத்த வேண்டும். இரு தரப்பு படையினரும் இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளுக்கு கட்டுப்பட வேண்டும். சீன ராணுவத்தினர் எல்லைக்கட்டுபாட்ட கோட்டு பகுதியை (LAC) கண்டிப்பாக மதிக்க வேண்டும் மற்றும் கடைபிடிக்க வேண்டும் மற்றும் அதை மாற்ற ஒருதலைப்பட்ச நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று ஜெய் சங்கர் கூறினார்.

சமாதானமாக செல்ல முடிவு
மேலும இருவரும் பேச்சின் முடிவில், ஒட்டுமொத்த நிலைமை பொறுப்பான முறையில் கையாளப்படும் என்றும் இரு தரப்பினரும் ஜூன் 6 ஆம் தேதி படை விலக்கல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உண்மையாக செயல்படுத்துவதாகவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளின்படி சமாதானத்தை உறுதிசெய்வதையொட்டி இரு தரப்பினரும் எந்தவொரு மேல் நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications