டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்துக்கு 6வது தவணையாக... ரூ.335.41 கோடி... மத்திய அரசு நிதி ஒதுக்கீடு!!

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசு. 15வது நிதிக்குழு பரிந்துரைப்படி தமிழகத்துக்கு 6வது தவணையாக ரூ.335.41 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது ஆந்திரா, கேரளா உள்பட 14 மாநிலங்களுக்கு ரூ.6,195 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதன்படி கேரளாவுக்கு ரூ.1,27,691.66 கோடியும், பஞ்சாப்புக்கு ரூ.638.25 கோடியும், மேற்கு வங்கத்துக்கு ரூ.417.75 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு 335.41 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக மேகாலயாவிற்கு ரூ.4091.61 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Government releases Rs 6,195 crore grant to 14 states; Rs. 335.41 crore to Tamil Nadu

ஆந்திரா மாநிலத்திற்கு ரூ. 49141.66 கோடி, அசாம் மாநிலத்துக்கு ரூ. 63158.33 கோடி, இமாச்சல பிரதேசத்துக்கு ரூ. 95258.33 கோடி, மணிப்பூா் மாநிலத்துக்கு ரூ. 23533.33 கோடி, மிசோரம் மாநிலத்துக்கு ரூ. 11850 கோடி, நாகலாந்து மாநிலத்துக்கு ரூ. 32641 கோடி, திருபுரா மாநிலத்துக்கு ரூ. 26966.66 கோடி, உத்தரகாண்ட் மாநிலத்துக்கு ரூ. 41775 கோடியை மத்திய நிதித்துறை அமைச்சகம் ஓதுக்கீடு செய்துள்ளது. அதிகபட்சமாக இந்த முறை கேரளாவுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கொரோனா நெருக்கடியில் இருக்கும் மாநில அரசுகளுக்கு உதவும் வகையில், 15வது நிதி ஆணையம் பரிந்துரைத்தபடி, 6வது தவணையாக 14 மாநிலங்களுக்கு ரூ.6,195.08 கோடி வழங்கப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிவிட்டுள்ளார்.

English summary
Government releases Rs 6,195 crore grant to 14 states; Rs. 335.41 crore to Tamil Nadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X