ரஷ்யா உறவை முறிக்கும் இந்தியா? வரி குறைத்த டிரம்ப்பின் உத்தரவை கவனிச்சீங்களா! போச்சு
டெல்லி: இந்தியா - அமெரிக்கா இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலமாக இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்த 50 சதவீத வரி வெறும் 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் நம்நாட்டின் வர்த்தகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேவேளையில் இந்த ஒப்பந்தம் என்பது நம் நாட்டுக்கும், நெருங்கிய நட்பு நாடான ரஷ்யா இடையேயான உறவை துண்டிக்கும் வகையில் உள்ளதா? என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்தார். இதனால் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் பொருட்களின் ஏற்றுமதி சரிந்தது. தற்போது இருநாடுகள் இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. முதற்கட்டமாக இடைக்கால ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி நம் நாட்டுக்கு அமெரிக்கா விதித்த பரஸ்பர வரி 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் உக்ரைன் மீது போர் புரிந்து வரும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் விதிக்கப்பட்ட 25 சதவீத அபராத வரி முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது.
இப்படியாக டிரம்ப் விதித்த 50 சதவீத வரியில் மொத்தம் 32 சதவீத வரி நீக்கப்பட்டுள்ளதால் 18 சதவீத வரி மட்டுமே இந்தியா செலுத்த வேண்டும்.
ரஷ்யாவுக்கு சிக்கல்
இதனால் அமெரிக்காவுக்கான இந்திய பொருட்களின் வர்த்தகம் மீண்டும் அதிகரிக்கும். இது நம் நாட்டு வர்த்தகர்களுக்கான குட்நியூஸாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த ஒப்பந்தம் நம் நாட்டின் நெருங்கியநண்பனான ரஷ்யாவுக்கு சிக்கலாக மாறலாம் என்று கூறப்படுகிறது.
டிரம்ப் உத்தரவில் இருக்கும் மேட்டர்
இதற்கான நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார். அதில், ‛‛இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளது.
அதுமட்டுமின்றி இந்தியா, அமெரிக்காவிடம் இருந்து எரிசக்தி பொருட்களை வாங்குவதற்கும், அமெரிக்காவுடன் பாதுகாப்பு துறை சார்ந்த ஒத்துழைப்பை மேம்படுத்த அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது'' என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
படிப்படியாக நிறுத்தும் இந்தியா?
அதோடு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா வாங்கினால் மீண்டும் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அமெரிக்காவின் வரி குறைப்பு சலுகையை பெற ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா படிப்படியாக குறைத்து ஒரு கட்டத்தில் நிறுத்துமோ என்று கூறப்படுகிறது. இது நடக்கும் பட்சத்தில் ரஷ்யா பெரும் சிரமத்தை எதிர்கொள்ளும்.
ஏனென்றால் உக்ரைன் மீதான போரால் ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார தடைகள் உள்ளன. இந்தியாவும், சீனாவும் தான் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இது ரஷ்யாவின் பொருளாதாரத்துக்கு கைக்கொடுத்து வருகிறது. இப்போது இந்தியா கச்சா எண்ணெயை குறைக்கும் பட்சத்தில் ரஷ்யாவுக்கு சிக்கல் ஏற்படும்.
தளவாட இறக்குமதிக்கும் சிக்கல்
அதுமட்டுமின்றி நம் நாடு ரஷ்யாவிடம் இருந்து தான் அதிகமான பாதுகாப்பு துறைக்கான ராணுவம், கடற்படை, விமானப்படைக்கான தளவாடங்களை வாங்கி பயன்படுத்தி வருகிறது. ஆனால் இதில் இந்தியா அடுத்த 10 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு துறை சார்ந்த ஒத்துழைப்பை மேம்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக கூட்டறிக்கையில் இருநாடுகள் இடையே குறிப்பிட்ட விமானம் மற்றும் அதன் உதிரி பாகங்கள் மீதான வரிகளை நீக்குவது, அடுத்த 5 ஆண்டுகளில் 500 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.45 லட்சம்) மதிப்புள்ள அமெரிக்க எரிசக்தி பொருட்கள், விமானம் மற்றும் அதன் பாகங்களை இந்தியா வாங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனால் ரஷ்யாவிற்கு பதில் அமெரிக்காவிடம் கணிசமான அளவுக்கு தளவாடங்களை இந்தியா வாங்க வாய்ப்புள்ளது. இது ரஷ்யாவிற்கான வருமானத்தை குறைக்கும். இதனால் தான் அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் வரியை போட்டு அதன் வழியாக இந்தியா- ரஷ்யா இடையேயான உறவை சிதைத்துள்ளாரா? என்று பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
-
ஒரு வழியாக டிரம்ப் எடுத்த முடிவு.. ஈரான் போரில் மாபெரும் ட்விஸ்ட்.. சஸ்பென்ஸ் வைக்கும் அமெரிக்கா! -
நேட்டோவில் இருந்து விலகும் அமெரிக்கா? உலக நாடுகளுக்கே அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்.. இப்படி ஆகிடுச்சே -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது?












Click it and Unblock the Notifications