உடனே போரை நிறுத்துங்கள்.. எந்த பிரச்சனைக்கும் பேச்சுவார்த்தையே தீர்வு.. புதினிடம் மோடி வலியுறுத்தல்
ரஷ்ய அதிபரிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்
டெல்லி: உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என ரஷ்ய அதிபரிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் வலியுறுத்தியுள்ளார்.அமெரிக்கா தொடர்ந்து ரஷ்யாவை எச்சரித்து வந்த நிலையில், உக்ரைன் தலைநகருக்குள் ரஷ்ய படைகள் நுழைந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Recommended Video
ரஷ்ய தாக்குதலுக்கு உக்ரைன் பாதுகாப்பு படையினரும் பதிலடி தந்து வருகின்றனர்.. இந்த தாக்குதலால் இருதரப்பிலும் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என்று நூற்றுக்கணக்கான அப்பாவிகள் உயிரிழந்துள்ளனர்.

உலக தலைவர்கள்
எனவே, இந்த போரை நிறுத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை இந்திய பிரதமர் மோடி தொடர்பு கொண்டு பேச வேண்டும் என இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் பொலிகா நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்... அதாவது, "பிரதமர் மோடி சொன்னால் ரஷ்ய அதிபர் புதின் கேட்பார்... எத்தனை உலக தலைவர்கள் சொல்வதை புதின் கேட்கக்கூடும் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், மோடி மீது எனக்கு நிறைய நம்பிக்கை உள்ளது.. அவரது குரல் மதிப்பு மிக்கது" என்று தெரிவித்திருந்தார்.

கோரிக்கை
எனவே, ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி நேற்றைய தினம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவலும் வெளியானது.. அப்போது, உக்ரைன் மீது நடத்தப்படும் தாக்குதலை நிறுத்த புதினிடம், பிரதமர் மோடி கோரிக்கை விடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.. இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

செய்திக்குறிப்பு
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் உள்ளதாவது: "நேட்டோ - ரஷியா இடையிலான பிரச்சனைக்கு அமைதியான மற்றும் நேர்மையான முறையில் தீர்வு காண வேண்டும் என்பதே இந்தியாவின் நீண்டகால நிலைப்பாடாக உள்ளது என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.. இந்தியா ரஷியா உயர் அதிகாரிகள் மட்டத்தில் போர் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

முக்கியத்துவம்
மேலும் உக்ரைனில் உள்ள இந்திய குடிமக்கள், குறிப்பாக மாணவர்களின் பாதுகாப்பு குறித்தும் இந்தியாவின் கவலைகள் குறித்தும் ரஷ்ய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி உணர்த்தியதுடன், அவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கும் இந்தியாவுக்கு திரும்புவதற்கும் அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். உக்ரைன் -ரஷ்யா இடையேயான போரில் நடுநிலைமை வகிப்பதாக இந்தியா தெரிவித்திருந்துள்ள நிலையில், இப்போரை உடனடியாக நிறுத்தும்படி ரஷிய அதிபரை, பிரதமர் மோடி கேட்டு கொண்டுள்ளது சர்வதேச அரங்கில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications