நீதித்துறை குறித்த விமர்சனங்களுக்கு மன்னிப்பு கேட்கவே முடியாது: பிரசாந்த் பூஷன் திட்டவட்டம்
டெல்லி: நீதித்துறை மீதான விமர்சனங்களுக்கு தாம் ஒருபோதும் மன்னிப்பு கேட்கவே முடியாது என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே, சொகுசு இரு சக்கர வாகனத்தில் அமர்ந்திருக்கும் படத்தை பிரசாந்த் பூஷன் சமூக வலைதளங்களில் விமர்சித்திருந்தார். இதனால் பிரசாந்த் பூஷன் மீது உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து.

அத்துடன் கடந்த காலங்களில் நீதித்துறையை பிரசாந்த் பூஷன் விமர்சித்த விவகாரங்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டன. உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆர். கவாய் மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.
இவ்வழக்கில் பிரசாந்த் பூஷன் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்துடன் அவருக்கான தண்டனை விவரம் கடந்த 20-ந் தேதி அறிவிக்கப்பட இருந்தது. ஆனால் தாம் மறு ஆய்வு செய்ய இருப்பதால் தண்டனை குறித்த விவாதங்களை நடத்த கூடாது என பிரசாந்த் பூஷன் மனுத் தாக்கல் செய்தார்.
இதனை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், உங்களுடைய விமர்சனங்களை மறுபரிசீலனை செய்ய 2அல்லது 3 நாட்கள் அவகாசம் எடுத்து கொள்ளலாம்.. அனைத்துக்கும் ஒரு எல்லை உண்டு என கூறி இருந்தனர். ஆனாலும் அப்போதே பிரசாந்த் பூஷன் இந்த கால அவகாசத்தை நிராகரித்திருந்தார்.
அத்துடன், உங்களிடம் கருணையை நான் எதிர்பார்க்கவில்லை.. எனக்கு எந்த தண்டனை விதித்தாலும் ஏற்கவும் தயார் எனவும் அவர் தெரிவித்திருந்தார். உச்சநீதிமன்றம் பிரசாந்த் பூஷனுக்கு கொடுத்த கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷன் இன்று துணை அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தாம் மன்னிப்பு கேட்கவே முடியாது என திட்டவட்டமாக பிரசாந்த் பூஷன் கூறியிருக்கிறார். மேலும் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதில் உச்சநீதிமன்றமே கடைசி புகலிடம் என்றும் மன்னிப்பு கேட்பதிலும் கூட ஒரு நேர்மையான முறை இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம்தான் கூறியிருக்கிறது எனவும் பிரசாந்த் பூஷன் சுட்டிக்காட்டியுள்ளார்.
-
எல்லாம் சரிதான்! SIRல் தவறு எதுவும் இல்லை! எல்லா மனுக்களையும் மொத்தமாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications