நுபுர் சர்மாவை ஏன் கைது செய்யலை? சிவப்பு கம்பள மரியாதை கொடுத்ததா போலீஸ்?உச்சநீதிமன்றம் விளாசல்
டெல்லி: நபிகள் நாயகத்தை அவதூறாக பேசிய விவகாரத்தில் பாஜக மாஜி நிர்வாகி நுபுர் சர்மாவுக்கு பேச்சுரிமை இருக்கிறது என்கிற அவரது வாதத்தை கடுமையாக நிராகரித்தது உச்சநீதிமன்றம். அத்துடன் ஜனநாயகத்தில் புல் வளரவும் உரிமை இருக்கிறது; அதே புல்லை கழுதை மேயக் கூடவும்தான் உரிமை இருக்கிறது; நுபுர் சர்மாவை ஏன் இதுவரை கைது செய்யவில்லை என கொந்தளிப்பை காட்டினர் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.
நபிகள் நாயகத்தை டிவி விவாதம் ஒன்றில் அவதூறாக விமர்சித்திருந்தார் நுபுர் சர்மா. அவரது இந்த பேச்சால் நாடு முழுவதும் போராட்டங்களும் வன்முறைகளும் வெடித்தன. பல்வேறு நாடுகளும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தன. ஆனால் நுபுர் சர்மா மீது வழக்கு மட்டும் போடப்பட்டது. அவர் கைது செய்யப்படவில்லை. பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

உச்சநீதிமன்றத்தில்
மேலும் நுபுர் சர்மாவின் கருத்தை ஆதரித்த ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் டெய்லர், இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் தம் உயிருக்கு ஆபத்து உள்ளது; தம் மீதான வழக்குகளை டெல்லிக்கு மாற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் போனார் நுபுர் சர்மா. ஆனால் உச்சநீதிமன்றமோ நுபுர் சர்மாவின் கோரிக்கையை நிராகரித்ததுடன் அவரை மிக கடுமையாகவும் விமர்சித்தது.

மன்னிப்பு கேளுங்க
நுபுர் சர்மாவுக்கு எதிராக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்துகள்: நுபுர் சர்மாவின் பொறுப்பற்ற பேச்சால் இந்த தேசம் பற்றி எரிகிறது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் டெய்லர் படுகொலைக்கு நுபுர் சர்மாதான் காரணம். நுபுர் சர்மா நாட்டு மக்களிடம் டிவியில் மன்னிப்பு கேட்க வேண்டும்.

வெட்க கேடானது
நுபுர் சர்மா தம்முடைய கருத்துகளை வாபஸ் பெற்றது என்பது காலம்தாழ்த்திய செயல். நுபுர் சர்மாவும் அவரது வழக்கறிஞர்களும் நடந்து கொள்கிற விதம் மிகவும் வெட்கக் கேடானது. நுபுர் சர்மா தமது உயிருக்கு ஆபத்து என்கிறார். அவரால்தான் இந்த ஒட்டுமொத்த நாட்டுக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. நுபுர் சர்மா போன்றவர்கள் ஒருவித செயல்திட்டத்துக்காகவே பேசுகின்றனர். இப்படி பேசுவதன் மூலம் விளம்பரம் தேடுகின்றனர்.

கைது செய்யலை ஏன்?
நுபுர் சர்மா மீது இத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவே? நுபுர் சர்மாவை ஏன் டெல்லி போலீசார் கைது செய்யவில்லை? விசாரணைக்குப் போன நுபுர் சர்மாவுக்கு சிவப்பு கம்பள மரியாதை கிடைத்ததா? அதிகாரம் தங்களிடம் இருக்கிறது என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்பது எப்படி சரியாகும்?

கழுதை புல்லை மேயவும் உரிமை இருக்கு
இதுஜனநாயக நாடுதான்.. இங்கே பேச்சுரிமையும் இருக்கு.. புல் வளர்வதற்கும் உரிமை இருக்கு.. அதே புல்லை கழுதை மேய்வதற்கும் கூட உரிமை இருக்கிறது. தாம் பேசியதால் ஏற்படும் எதிர்விளைவுகளை கொஞ்சமும் யோசிக்காமல் பேசியிருக்கிறார் நுபுர் சர்மா. ஆகையால் அனைத்து வழக்குகளையும் டெல்லி மாற்ற கோரும் நுபுர் சர்மா மனு நிராகரிக்கப்படுகிறது. இவ்வாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications