டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாடுவானில் தள்ளாடிய சிங்கப்பூர் விமானம்.. டெல்லியில் அவசரமாக தரையிறக்கம் .. 228 பயணிகள் தப்பினர்

Google Oneindia Tamil News

டெல்லி: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் சக்கரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக டெல்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் 228 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

டெல்லி விமான நிலையத்தில் இருந்து 228 பயணிகளுடன் A380-800 என்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம், இன்று காலை 8.20க்கு சிங்கப்பூர் புறப்பட்டு சென்றது. ஆனால் முன்பக்க சக்கரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது.

Singapore Airlines aircraft Makes Emergency Landing In Delhi airport

இதனால் விமானம் திசை மாற்றும் திறனை இழந்தது. இதையடுத்து விமானம் அவசரமாக டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. பத்திரமாக விமானம் தரையிறக்கப்பட்டதால் விமானத்தில் இருந்த 228 பயணிகள் நிம்மதி அடைந்தனர்.

இதையடுத்து சக்கரத்தில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டு அதன் பின்னர் 8.38 மணிக்கு சிங்கப்பூருக்கு விமானம் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் உடனடியாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

டெல்லி விமான நிலையத்தில் இச்சம்பவம் காரணமாக இன்று காலை பரபரப்பான நிலை காணப்பட்டது.

English summary
Singapore Airlines aircraft carrying 228 people on Wednesday, Makes Emergency Landing In Delhi After Glitch
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X