வங்கிகளில் அதிக பணம் டெபாசிட் செய்த 3,000 பேருக்கு நோட்டீஸ் !
வங்கி கணக்கில் அதிக பணம் டெபாசிட் செய்த 3,000 பேருக்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லி: வங்கிகளில் அதிக பணம் டெபாசிட் செய்த 3,000 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார். மேலும் 291 பேரிடம் இருந்து கருப்பு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் நவம்பர் 8ம் தேதி 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பழைய நோட்டுகளை வங்கி, தபால் நிலையங்களில் வரும் 30ம் தேதி வரை டெபாசிட் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மக்கள் டெபாசிட் செய்து வருகின்றனர். அந்த வகையில் நவம்பர் 9ம் தேதி முதல் வங்கிகளில் செலுத்தப்படும் டெபாசிட் குறித்த விவரங்களை மத்திய அரசு தீவிரமாக கண்கானித்து வருகிறது.

இந்த நிலையில் மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் சுஷில் சந்திரா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வங்கி கணக்கில் அதிக பணம் செலுத்திய 3,000 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை 291 பேரிடம் கருப்பு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டோர்மண்ட்( செயல்படாத வங்கி கணக்கு), ஜன் தன் வங்கி கணக்குகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது..
291 இடங்களில் நடத்திய சோதனையில் தற்போது வரை 316 கோடிக்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையில் 80 கோடிக்கும் மேல் புதிய ரூபாய் நோட்டுக்கள். 76 கோடி மதிப்பிலான நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications