12 காட்டுச் சிங்கங்களுக்கு மத்தியில் பிறந்த வனமகன்...குஜராத் கிர் காட்டில் திக் திக் பிரசவம்!
அகமதாபாத்தின் அடர்ந்த கிர் வனத்தின் அருகே கர்ப்பிணிப் பெண் ஒருவர் 12 சிங்கங்களுக்கு மத்தியில் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
அகமதாபாத் : 32வயது பெண் ஆம்புலன்சில் சென்று கொண்டிருக்கும் போதே பிரசவ வலி எடுக்க அடர்ந்த காட்டு வழியில் சிங்கங்கள் புடை சூழ ஆண் குழந்தையை பிரசவித்துள்ளார்.
பெண்கள் தங்களின் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு பிரசவம். மேன்குபென் மக்வானாவிற்கு இது இன்னும் கூடுதல் மறக்க முடியாத சம்பவம், ஏனெனில் அவர் காட்டில் சிங்கங்களுக்கு மத்தியில் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
32 வயது நிறைமாத கர்ப்பிணியான மேன்குபென் மக்வானாவிற்கு ஜூன் 29ம் தேதி இரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அம்ரேலி மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தின் அருகே கிர் வனப்பகுதி வழியாக ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்த போது மேன்குபென்னிற்கு பிரசவ வலி அதிகரித்துள்ளது.

பிரசவ வலி
நடந்த சம்பவத்தை அம்ரேலி ஆம்புலன்ஸ் சேவை நிர்வாகி சேத்தன் கடே திகிலுடன் விவரிக்கிறார். கடந்த வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் மேக்னாவை லான்ஸ்பூர் கிராமத்தில் இருந்து ஜஃபர்பாத் நகரில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். ஆம்புலன்சை ஒட்டுனர் ராஜூ ஜாதவ் ஓட்டிச் செல்ல, ஆம்புலன்சில் தொழில்நுட்ப உதவியாளர் அசோக் மேக்னா இருந்துள்ளார். திடீரென மேக்னாவிற்கு பிரசவ வலி அதிகரித்தால் ஆம்புலன்ஸை நிறுத்தச் சொல்லியிருக்கிறார் அசோக்.

சிங்கங்கள் படைபெயடுப்பு
அது அடர்ந்த வனப்பகுதியாக இருந்த போது தைரியமாக வாகனத்தை நிறுத்தி, மகப்பேறு மருத்துவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் அளித்த தகவலின் படி பிரசவம் பார்த்துள்ளார். இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், மனிதர்கள் இருப்பதை உணர்ந்த 12 சிங்கங்கள் ஆம்புலன்ஸை சுற்றி பரேடு நடத்தியுள்ளன.

சமாளித்த ஊழியர்கள்
ஜாதவ் உள்ளூரைச் சேர்ந்தவர் என்பதால் சிங்கம் குறித்து அச்சப்படாமல், அவற்றை உன்னிப்பாக கவனித்து வந்துள்ளார். இந்த இடைபட்ட நேரத்தில் மருத்துவர்களின் ஆலோசனையைக் கேட்டு அசோக் மேக்னாவிற்கு பிரசவம் பார்த்துள்ளார். இதில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

வழிவிட்ட விலங்குகள்
இதனையடுத்து ஜாதவ் மெல்ல ஆம்புலன்ஸை நகர்த்த, சிங்கங்கள் எந்த எதிர்ப்பும் காட்டாமல் அழகாக ஆம்புலன்சிற்கு வழிவிட்டு சென்றுள்ளன. இந்நிலையில் தாயும் சேயும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் இப்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.

வரலாற்று நாயகன்
புராணக் கதைகளில் காட்டில் புலி, சிங்கங்களுக்கு மத்தியில் ஐயப்பன் வளர்ந்ததாக படித்திருக்கிறோம், ஆனால் நிஜத்தில் சிங்கங்களின் அணிவகுப்பிற்கு மத்தியில் பிறந்த இந்த குழந்தையும் வரலாற்று நாயகனாகியுள்ளார். அந்த வகையில் மேன்குபென் மேக்னாவிற்கு இது மறக்க முடியாத பிரசவம் தான்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications