மகாராஷ்டிரவில் மூடநம்பிக்கை எதிர்ப்பு மசோதா தாக்கல்
Subscribe to Oneindia Tamil

மகாராஷ்டிரா மாநிலத்தில் மூடநம்பிக்கையை இழிக்க சமூக ஆர்வலர் தபோல்கர் போராடி வந்தார். அவர் திடீரென மர்ம நபர்களால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து மூடநம்பிக்கைகளை ஒழிக்க சட்டம் கொண்டுவரப்படும் மகாராஷ்டிரா மாநில அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து அம்மாநில சட்டசபையில் சமூக நீதித்துறை அமைச்சர் சிவாஜிராவ் மொகே மூடநம்பிக்கை ஒழிப்பு மசோதாவை நேற்று தாக்கல் செய்தார்.
அப்போது பேசிய சிவாஜிராவ், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், பாதுகாப்பான சமூகச் சூழலை உருவாக்குவதற்கும், அப்பாவி பொதுமக்களை மூடநம்பிக்கைகளில் இருந்து பாதுகாக்கவும் இந்த மசோதா வழி வகுக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications