என்னை கொன்றாலும் மறுபிறவி எடுப்பேன்: மம்தா பானர்ஜி ஆவேசம்
கொல்கத்தா: என்னை கொல்ல சதி நடக்கிறது, அப்படியே கொன்றாலும் மக்கள் மத்தியில் மறுபிறவி எடுப்பேன் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறியுள்ளார்.
தேர்தல் பிரசாரத்துக்கு இடையில் வியாழக்கிழமையன்று மாலை மால்டா நகரில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்தார். அப்போது அவரது அறையில் இருந்த ஏ.சி.யில் இருந்து புகை வெளியேறி திடீரென தீப்பிடித்துக் கொண்டது.

இதனால் புகை மூட்டத்தில் சிக்கிய மம்தா பானர்ஜியை அவரது உதவியாளர்கள் பத்திரமாக மீட்டனர். மின்சார கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக தெரியவந்தது.
மின் கசிவு விபத்து
இந்நிலையில் சிகிச்சைக்கு பின்னர் பிர்பும் மாவட்டத்தில் நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மம்தா, எனது ஓட்டல் அறையில் மின்சார கசிவு ஏற்பட வாய்ப்பே இல்லை. இது என்னை கொலை செய்ய நடந்த சதி. இது போன்றவர்களுக்கு வங்காளத்துக்கு நல்லது செய்தால் பிடிக்காது. என்னை கொலை செய்து விட்டு, மின்கசிவு காரணமாக விபத்தில் நான் இறந்ததாக நாடகமாட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
தேர்தல் போர்களம்
அப்படியே என் மீது தாக்குதல் நடந்தாலும், என்னை கொலை செய்தாலும், நான் மக்கள் மத்தியில் மீண்டும் மறுபிறவி எடுப்பேன். நான் இந்த மக்களுக்காக பணியாற்றுவதை உங்களால் தடுக்க முடியாது. நான் புகைமூட்டத்தில் சிக்கியதால் நேற்றிரவு எனக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. குளுக்கோசும் ஏற்றப்பட்டது.
இது தேர்தல் நேரம். எனவே எனது பிரசாரத்தை என்னால் ரத்து செய்ய முடியாது. டாக்டர்கள் ஓய்வு எடுக்கத்தான் சொல்வார்கள். ஆனால் அதை நான் கேட்க முடியுமா?'' என்றார்.
தேர்தல் ஆணையம்
இதனிடையே, திரிணாமுல் காங்கிரஸ் செயலாளர் முகுல்ராய் தேர்தல் ஆணையத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், "எங்கள் கட்சித் தலைவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேர்தல் கமிஷன் தவறிவிட்டது. பாதுகாப்பு விதிமுறைகளும், நடவடிக்கைகளும் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் நடந்துள்ள இந்த சம்பவம் தங்களின் அவமதிப்பான நிர்வாக போக்கையே காட்டுகிறது.
சதிவேலை
இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருந்தால், அதன் காரணமாக மேற்கு வங்கத்தில் மட்டுமின்றி நாடு முழுவதிலும் மிகவும் மோசமான விளைவுகள் எதிரொலித்து இருக்கும். மேலும், இந்த சம்பவத்தின் பின்னணியில் மிகப்பெரிய சதிவேலை இருக்கலாம் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். ஏ.சி.யில் இருந்து வெளிப்பட்ட கெடுதலான புகையால் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது" என்று கூறப்பட்டுள்ளது.
தடயஅறிவியல் சோதனை
இதனிடையே, மம்தா பானர்ஜி தங்கியிருந்த அறைக்கு தடய அறிவியல் துறையினர் சென்று அங்கு எவ்வாறு தீப்பிடித்தது என்பது பற்றிய விசாரணையை மேற்கொண்டனர். இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்று மத்திய அமைச்சரும், மேற்கு வங்க காங்கிரஸ் தலைவருமான ஆதிர்ரஞ்சன் சவுத்ரி கேட்டுக் கொண்டார்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications