பெங்களூரில் தண்ணீர் தட்டுப்பாடு: கையை பிசையும் மக்கள்
பெங்களூர்: கர்நாடகாவில் தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் பெங்களூர்வாசிகளுக்கு கார்பரேஷன் தண்ணீர் வாரத்திற்கு மூன்று முறைக்கு பதில் ஒரு முறை மட்டுமே அளிக்கப்படக்கூடும் என்று கூறப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் போதிய மழை பெய்யாததால் தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனை வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. கேஆர்எஸ் நீர்த்தேக்கத்தில் நீரின் அளவு 85 அடியாக கடந்த வாரம் குறைந்தது.
அந்த நீர்த்தேக்கத்தில் தண்ணீரின் அளவு வேகமாக குறைந்து வருகிறது. இப்படியே சென்றால் அடுத்த 2 வாரங்களில் நீரின் அளவு 50 அடியாக குறைந்துவிடும். மழை பெய்தால் மட்டுமே இந்த பிரச்சனையை தவிர்க்க முடியும்.

பெங்களூர்
நீர்த்தேக்கத்தில் நீரின் அளவு வேகமாக குறைந்து வருவதால் பெங்களூரும் பாதிக்கப்படும். தற்போது பெங்களூரில் கார்பரேஷன் தண்ணீர் வாரத்தில் மூன்று முறை வினியோகிக்கப்படுகிறது. ஆனால் தண்ணீர் பிரச்சனை தொடர்ந்தால் இனி வாரத்தில் ஒரு முறை தான் கார்பரேஷன் நீர் வழங்கப்படும் என்று அதிகாரிகள் ஒன் இந்தியாவிடம் தெரிவித்துள்ளனர்.

மழை
மழை பெய்தாலோ அல்லது பருவமழை காலம் முன்கூட்டியே துவங்கினாலோ தான் இந்த தண்ணீர் பிரச்சனையை உடனடியாக தீர்க்க முடியும். பருவமழை காலம் துவங்கும் வரை பெங்களூர்வாசிகளுக்கு வாரத்தில் ஒரு முறை மட்டுமே நீர் வழங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. பருவமழை காலம் மே மாத நடுவில் துவங்கும் என்று எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நீர்
பெங்களூர் நகருக்கு தினமும் 900 மில்லியன் லிட்டர் நீரை மாநகராட்சி வழங்கி வருகிறது. ஆனால் பெங்களூர் நகரின் தினசரி நீர் தேவை 1.3 பில்லியன் லிட்டர் ஆகும். இந்நிலையில் நீரின் அளவை மாநகராட்சி குறைத்தால் மக்கள் கடும் அவதிப்பட வேண்டி இருக்கும்.

காவிரி
பெங்களூருக்கு பல்வேறு வழிகளில் நீர் வருகிறது. பெங்களூர் நகரின் நீர் தேவையில் 80 சதவீதத்தை காவிரி ஆறு பூர்த்தி செய்கிறது. மேலும் அர்காவதி ஆற்றில் இருந்தும் நீர் பெறப்படுகிறது. ஆனால் அது நகரின் தேவையை 20 சதவீதம் தான் பூர்த்தி செய்கிறது.
-
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications