யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி.. பலர் மாயம்
யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Subscribe to Oneindia Tamil
பக்பாத்: யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தரபிரதேசத்தில் யமுனை ஆற்றில் 60 பேருடன் பயணம் செய்த படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.

பக்பாத் என்ற இடத்தில அருகே நடந்த விபத்தில் மேலும் பலரை காணவில்லை. அவர்களை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள் பலர் ஈடுபட்டுள்ளனர்.
யமுனை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மீட்கப்பட்ட உடல்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications