“கேசிஆர் ஆட்சி ஹிட்லர் ஆட்சி” – டுவிட்டரில் விமர்சித்த சந்திரபாபு நாயுடு மகன் மீது வழக்கு
ஹைதராபாத்: தெலங்கானா அரசு குறித்தும் முதல்வர் கே. சந்திரசேகர ராவ் குறித்தும் விமர்சித்ததாக தொடுக்கப்பட்ட பொது நலன் வழக்கில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ். இவர் சமீபத்தில் தெலங்கானா அரசை ரவுடிகள் ஆள்கின்றனர் என்றும், சட்டம் , ஒழுங்கு சீர்குலைந்து போய் விட்டதாகவும், முதல்வர் சந்திர சேகர ராவ் ஒரு ஹிட்லரை போன்று ஆட்சி நடத்துகிறார் என்றும் சமூக வலைதளமான டிவிட்டரில் கூறியிருந்தார்.
இதையடுத்து ஹைதராபாத்தை நேர்ந்த வழக்கறிஞர்கள் ரவிகுமார், அபிலாஷ் ஆகிய இருவரும் ரங்காரெட்டி நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம் இது குறித்து எல்.பி. நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.