வங்கி மோசடி வழக்கில் சிக்கிய ரோட்டோமேக் நிறுவன அதிபர் விக்ரம் கோத்தாரி கைது!

Subscribe to Oneindia Tamil

டெல்லி : வங்கி மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ரோட்டோமேக் நிறுவன அதிபர் விக்ரம் கோத்தாரி மற்றும் அவரது மகன் ராகுல் கோத்தாரி இருவரையும் சிபிஐ கைது செய்துள்ளது.

இந்திய பொதுத்துறை வங்கிகளில் ரூ. 800 கோடிக்கு மேல் கடன் பெற்றுவிட்டு அதனை திருப்பி செலுத்தாமல் தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்று ரூ. 3 ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி செய்ததாக விக்ரம் கோத்தாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

CBI arrested Vikram Kothari and his son rahul gothari

இது தொடர்பாக கோத்தாரி மற்றும் அவரது மகன் ராகுல் கோத்தாரியிடம் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் கடந்த 3 நாட்களாக விசாரணை நடைபெற்றது.

இதற்கு முன்னர் கோத்தாரியிடம் கான்பூரில் வைத்தும் விசாரணை நடத்தினர். கடந்த சில தினங்களாக விக்ரம் கோத்தாரியின் கான்பூர் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. இந்நிலையில் டெல்லியில் 48 மணி நேர விசாரணையின் முடிவில் தொழிலதிபர் விக்ரம் கோத்தாரி மற்றும் அவரது மகன் ராகுல் கோத்தாரியை சிபிஐ கைது செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+