கர்ப்பிணிப் பெண்ணிடம் பாலியல் குறும்பு... பத்ரிநாத் கோவில் தலைமை பூசாரி கைது
டெல்லி: கர்ப்பிணிப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப் பட்டு பத்ரிநாத் கோவிலின் தலைமை பூசாரி கைது செய்யப் பட்டுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தின் பழம்பெருமை வாய்ந்த பத்ரிநாத் கோவிலின் தலைமை பூசாரியான கேசவன் நம்பூதிரி, கடந்த திங்களன்று தனது உதவியாளருடன் டெல்லி மெராலிக்குச் சென்றிருந்தார். அங்கு பத்ரிநாத்தில் ஹோட்டல் வைத்திருக்கும் ஒருவரின் மகளை தனது அறைக்கு அழைத்து தகாத முறையில் நடக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
உடனடியாக, இது குறித்துப் போலீசில் புகார் அளித்துள்ளார் சம்பந்தப்பட்ட 28 வயது கர்ப்பிணிப் பெண். அவரது புகாரில், பூசாரியின் அறையில் சிகரெட் துண்டுகள் சிதறிக்கிடந்ததாகவும், மதுவாடையும் அடித்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கர்ப்பிணிப் பெண்ணின் புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மது போதையில் இருந்த கேசவன் நம்பூதிரியையும், அவரது உதவியாளரையும் கைது செய்தனர்.
பின்னர், அவர்கள் மீது சட்டவிரோதமாக சிறைவைத்தல் மற்றும் தகாத முறையில் நடந்துகொண்டது உள்ளிட்ட வழக்குகள் பதியப்பட்டு டெல்லி குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, அவர்கள் இருவருக்கும் 14 நாள் சிறைக்காவல் அளித்து தீர்ப்பளித்துள்ளார்.
இந்தக் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து பத்ரி-கேதார் கோவில் நிர்வாகம் தலைமை பூசாரி கேசவன் நம்பூதிரியை இடைநீக்கம் செய்து, நயாப் ராவல் விசி ஐஷ்வரா பிரசாத் என்பவரை புதிய தலைமை பூசாரியாக நியமித்துள்ளது.
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications