வாய் திறக்கலைன்னா என்ன.. எங்ககிட்ட செம ஆதாரங்கள் இருக்கு.. கார்த்தி சிதம்பரம் வழக்கில் சிபிஐ வாதம்
Recommended Video

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம், வாய் திறக்க மறுத்தாலும் கூட, அவருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் உள்ளன என்று சிபிஐ சார்பில், பட்டியாலா நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து முதலீடு பெற சட்ட விரோதமாக கார்த்தி சிதம்பரம் உதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, அவரை சிபிஐ கைது செய்துள்ளது.
பிப்ரவரி 28ம் தேதி கைது செய்யப்பட்ட அவர் டெல்லி பட்டியாலா, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

காவல் நீடிப்பு
சிபிஐ கோரிக்கையை ஏற்று, அவருக்கு மொத்தம் 4 முறை 'சிபிஐ காவல்' நீடிப்பு செய்யப்பட்டது. விசாரணை காலத்தில் கார்த்தி சிதம்பரம் வாய் திறக்கவில்லை என்று சிபிஐ குற்றம்சாட்டி வருகிறது. நேற்று மீண்டும் பட்டியாலா நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ ஆஜர்படுத்தியது. அப்போது கார்த்தி சிதம்பரத்திற்கு மார்ச் 24 வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

ஆதாரங்கள் உள்ளன
சிபிஐ தனது வாதத்தில், கார்த்தி சிதம்பரம் தொடர்ந்து மவுனம் காப்பதாகவும், விசாரணையில் கேள்விகளுக்கு அவர் நழுவுவதாகவும், இருப்பினும் இவ்வழக்கில் அவருக்கு எதிராக போதிய அளவுக்கு ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் கூறியுள்ளது.

நீதிமன்ற காவல்
முக்கியமான பொருளாதார குற்றச் செயலில் ஈடுபட்ட ஒருவருக்கு எதிராக போதிய அளவுகு்கு ஆதாரம் இருப்பதால் அவரை நீதிமன்ற காவலில் வைப்பது அவசியப்படுகிறது என்று சிபிஐ தனதுவாதத்தில் குறிப்பிட்டது.

வீட்டு சாப்பாடு
இதனிடையே கார்த்தி சிதம்பரம் தரப்பு வழக்கறிஞரோ, தங்கள் ஜாமீன் மனுவையும் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார். அதை வரும் 15ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். கார்த்தி சிதம்பரம் தனக்கு தனி சிறை ஒதுக்கப்பட வேண்டும் என்றும், வீட்டு சாப்பாடு வேண்டும் என்றும் முன் வைத்த கோரிக்கைகளை நீதிபதி ஏற்கவில்லை.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம்












Click it and Unblock the Notifications