கெஞ்சிய மகன்.. காலில் கயிறை கட்டி தலைகீழாக தொங்கவிட்ட கொடூரத் தந்தை.. பரபர சம்பவம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் வீட்டுப் பாடம் எழுதாமல் இருந்ததால் மகன் காலில் கயிற்றைக் கட்டி தொங்கவிட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
தலைகீழாக தொங்கியதால் வலி பொறுக்கமுடியாமல் என்னை கொன்னுவிடுங்கள் என தந்தையிடம் மகன் கெஞ்சிய வீடியோ வைரல் ஆனது. தந்தை மகனை தண்டிப்பதும், மகன் கெஞ்சுவதும் செல்போனில் படம்பிடிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

படிக்காமல் டிமிக்கி
ராஜஸ்தான் மாநிலத்தில் சித்தோர்கரில் வசித்து வரும் ஒரு சிறுவன் பள்ளிப் பாடங்களை முறையாக படிப்பதில்லை எனக் கூறப்படுகிறது. பள்ளிக்கு சென்று ஒழுங்காக படிக்கமாலும், வீட்டிலும் பெற்றோர் பேச்சை மதிக்காமலும் டிமிக்கி கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதற்கிடையே நேற்று வீட்டில் இருந்த அந்த மாணவன் வீட்டுப் பாடம் எழுதாமல் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தந்தை ஏன் படிக்கவில்லை எனக் கேட்டுள்ளார்.

சிறுவனுக்கு கொடூர தண்டனை
பிறகு படிப்பதாக மகன் கூற மேலும் கோபம் அடைந்த தந்தை அவனை தண்டிக்க முடிவு செய்தார். இதையடுத்து மகனின் கால்களில் கயிறு போட்டு கட்டினார். பின்னர் அவனை தலைகீழாக தூக்கிலிட்டுள்ளார். அந்த கொடூர மனம் படைத்த தந்தை அதோடு விட்டு விடாமல் ஒரு பிரம்பு எடுத்து வந்து மகனை அடிக்க ஆரம்பித்துள்ளார். இதை பார்த்த தாய் வந்து தடுக்க முயன்றார். ஆனால் தந்தை விடவில்லை.

என்னைக் கொன்றுவிடுங்கள்
வலி தாங்க முடியாமல் சிறுவன் "தயவு செய்து என்னைக் கொன்றுவிடுங்கள். ஆனால் தலைகீழாக தொங்க விடாதீர்கள்" என கதறி அழுதான். இதனால் மனம் உடைந்த அந்த சிறுவனின் தாய் இந்தக் கொடுமைகளை தனது செல்போனில் படம்பிடித்தார். பின்னர் வீட்டை விட்டு வெளியேறிய தாய் ஜோகானியா மாதா பகுதியில் தன்னுடைய சகோதரன் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

சமூக வலைதளத்தில் வைரல்
இதுபோல் பலமுறை கணவர் தன் மகனை தண்டித்ததாக அவர் தெரிவித்துள்ளார். எனினும் இந்த பிரச்சனை சமூக வலைதளங்களில் செல்லவே தந்தை தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications