கெஞ்சிய மகன்.. காலில் கயிறை கட்டி தலைகீழாக தொங்கவிட்ட கொடூரத் தந்தை.. பரபர சம்பவம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் வீட்டுப் பாடம் எழுதாமல் இருந்ததால் மகன் காலில் கயிற்றைக் கட்டி தொங்கவிட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
தலைகீழாக தொங்கியதால் வலி பொறுக்கமுடியாமல் என்னை கொன்னுவிடுங்கள் என தந்தையிடம் மகன் கெஞ்சிய வீடியோ வைரல் ஆனது. தந்தை மகனை தண்டிப்பதும், மகன் கெஞ்சுவதும் செல்போனில் படம்பிடிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

படிக்காமல் டிமிக்கி
ராஜஸ்தான் மாநிலத்தில் சித்தோர்கரில் வசித்து வரும் ஒரு சிறுவன் பள்ளிப் பாடங்களை முறையாக படிப்பதில்லை எனக் கூறப்படுகிறது. பள்ளிக்கு சென்று ஒழுங்காக படிக்கமாலும், வீட்டிலும் பெற்றோர் பேச்சை மதிக்காமலும் டிமிக்கி கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதற்கிடையே நேற்று வீட்டில் இருந்த அந்த மாணவன் வீட்டுப் பாடம் எழுதாமல் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தந்தை ஏன் படிக்கவில்லை எனக் கேட்டுள்ளார்.

சிறுவனுக்கு கொடூர தண்டனை
பிறகு படிப்பதாக மகன் கூற மேலும் கோபம் அடைந்த தந்தை அவனை தண்டிக்க முடிவு செய்தார். இதையடுத்து மகனின் கால்களில் கயிறு போட்டு கட்டினார். பின்னர் அவனை தலைகீழாக தூக்கிலிட்டுள்ளார். அந்த கொடூர மனம் படைத்த தந்தை அதோடு விட்டு விடாமல் ஒரு பிரம்பு எடுத்து வந்து மகனை அடிக்க ஆரம்பித்துள்ளார். இதை பார்த்த தாய் வந்து தடுக்க முயன்றார். ஆனால் தந்தை விடவில்லை.

என்னைக் கொன்றுவிடுங்கள்
வலி தாங்க முடியாமல் சிறுவன் "தயவு செய்து என்னைக் கொன்றுவிடுங்கள். ஆனால் தலைகீழாக தொங்க விடாதீர்கள்" என கதறி அழுதான். இதனால் மனம் உடைந்த அந்த சிறுவனின் தாய் இந்தக் கொடுமைகளை தனது செல்போனில் படம்பிடித்தார். பின்னர் வீட்டை விட்டு வெளியேறிய தாய் ஜோகானியா மாதா பகுதியில் தன்னுடைய சகோதரன் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

சமூக வலைதளத்தில் வைரல்
இதுபோல் பலமுறை கணவர் தன் மகனை தண்டித்ததாக அவர் தெரிவித்துள்ளார். எனினும் இந்த பிரச்சனை சமூக வலைதளங்களில் செல்லவே தந்தை தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது












Click it and Unblock the Notifications