வெங்காய விலை உயர்வை தடுக்க நடவடிக்கை: மத்திய அரசு அதிரடி
டெல்லி: இந்தியாவில் உள்ளூர் சந்தைகளில் வெங்காய விலை உயர்வைத் தடுக்க குறைந்த பட்ச ஏற்றுமதி விலையை மத்திய அரசு 500 டாலராக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் 15மில்லியன் டன் வெங்காயம் பயன்படுத்தப்படுகிறது. மிக முக்கிய நுகர்வு பொருளான வெங்காயம் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டால் உள்ளூர் சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்வு வழி வகுக்கும்.
இதனைக் கட்டுப்படுத்த இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வெங்காயத்தின் குறைந்தபட்ச விலையை உயர்த்தி இன்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஏற்றுமதி விலை அதிகரிப்பு
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் வெங்காயத்தின் குறைந்தபட்ச ஏற்றுமதி விலை ஒரு டன்னுக்கு 500 டாலராக அதாவது 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏற்றுமதி குறைந்து, உள்ளூர் சந்தைகளில் வெங்காயத்தின் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடு
கடந்த ஜூன் 17ம் தேதி வெங்காயத்திற்காக குறைந்தபட்ச ஏற்றுமதி விலை டன்னுக்கு 300 டாலராக (ரூ.18000) நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் வெங்காயத்தின் குறைந்த பட்ச ஏற்றுமதி விலை டன்னுக்கு 30000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

உருளை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு
கடந்த சில தினங்களுக்கு முன்பு உருளைக்கிழங்கு ஏற்றுமதியை கட்டுப்படுத்த அதற்கு டன் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை 450 டாலர் (ரூ.27000) என நிர்ணயித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

அதிகரித்த பணவீக்கம்
நாட்டின் பணவீக்கம் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு 6.01 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. காய்கறிகள், பழங்கள், தானியங்கள் ஆகியவற்றின் விலை உயர்வே பணவீக்கம் அதிகரிக்கக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காய்கறி, பழங்கள் விலை உயர்வு
உருளைக்கிழங்கின் விலை 31.44 சதவிகிதம் அதிகரித்ததும், பழங்கள் விலை 19.40 சதவிகிதம் மற்றும் அரிசியின் விலை 12.75 சதவிகிதம் அதிகரித்ததும் பணவீக்கம் அதிகரிக்கக் காரணம் எனக் கூறப்படுகிறது. எனவே விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அதிரடி நடவடிக்கை
அடுத்தவாரம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் விலைவாசியை கட்டுப்படுத்த மத்தியஅரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாக மத்திய நிதிஅமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications