கெஜ்ரிவால் போல என்னால் சமரசம் செய்து கொள்ள முடியாது- பிரசாந்த் பூஷன்
டெல்லி: அரசியலில் சில சமரசங்கள் செய்ய வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகிறார். ஆனால் அதற்கு நான் தயாராக இல்லை என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. இந்நிலையில் இது குறித்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் பிரசாந்த் பூஷன் முதன்முறையாக பேசியுள்ளார்.

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது,
கட்சியின் கொள்கைகள் குறித்து தான் தற்போது பிரச்சனை எழுந்துள்ளது. பிற அரசியல் கட்சிகளில் இருந்து வித்தியாசமான கட்சியை நாங்கள் துவங்கினோம். இங்கு ஒரு நபரை மையமாக வைத்து அனைத்தும் நடக்கக் கூடாது என்று இருந்தோம். எந்த ஒரு முடிவும் அனைவரும் சேர்ந்து எடுக்க வேண்டும் என்று தீர்மானித்தோம்.
அரவிந்தின் அரசியல் தீர்வுகளை மதிக்கிறேன். ஆனால் சில சமயம் அவர் தவறாகக் கூறக்கூடும். ஆம் ஆத்மி கட்சி செயல்படும் முறையில் எனக்கு உடன்பாடு இல்லை. கட்சியின் செலவுக் கணக்கு மக்களுக்கு காண்பிக்கப்படுவது இல்லை. அரவிந்த் தனக்கேற்றவாறு செயல்படுகிறார். அரசியலுக்காக சில சமரசங்களை செய்ய வேண்டும் என்கிறார் அரவிந்த். அதில் எனக்கு உடன்பாடு இல்லை.
அரவிந்திடம் சிறப்பான குணங்கள் உள்ளது. அவர் தனித்துவம் வாய்ந்த தலைவர். அதே சமயம் அவருக்கு சில பலவீனங்களும் உள்ளது. அரசியலில் சமரசம் செய்யும் அவரது எண்ணம் சரி அல்ல. மீண்டும் காங்கிரஸின் ஆதரவை நாடுவதா வேண்டாமா என்பது குறித்து அரசியல் நடவடிக்கை குழு மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது.
அரவிந்துடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்ய முயற்சித்து வருகிறோம். அரவிந்த் கெஜ்ரிவாலை கட்சியை விட்டு நீக்குவது பற்றி நானோ, யோகேந்திர யாதவோ எதுவும் கூறியது இல்லை. என்னையும், யாதவையும் கட்சியை விட்டு விலக்கினால் அது எங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.
பாஜக ஊழல் கட்சி என்பது என் கருத்து. நான் ஜேட்லிக்கு எதிராக புகார் அளித்துள்ளேன். அதே சமயம் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டபோது நலம் விசாரித்துள்ளேன். நான் ஜேட்லிக்கு நெருக்கமானவன் என்று கூறுவதில் உண்மை இல்லை. கிரண் பேடி குறித்த எனது தந்தையின் கருத்துக்கும் எனக்கும் தொடர்பு இல்லை.
வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. ஜனநாயக முறைப்படி கட்சியில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். கட்சி மேலிடம் முன்பு மண்டியிட முடியாது. பிற கட்சிகளைப் போன்று கட்சி மேலிட கலாச்சாரத்தை பின்பற்ற முடியாது.
நான் கட்சியை விட்டு விலக முயற்சிக்கவில்லை. கட்சி உருவாக உழைத்தவர்கள் அது ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications