கர்நாடகாவில் பாகுபலி-2 ரிலீஸ் ஆகனுமா.. சத்யராஜ் மன்னிப்பு கேட்கனும்.. கன்னட அமைப்புகள் மிரட்டல்
பெங்களூர்: கர்நாடகாவில் பாகுபலி-2 ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. படத்தை ரிலீஸ் செய்ய வேண்டுமானால், நடிர் சத்யராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, கன்னட அமைப்புகள் நிர்பந்தம் செய்து வருகின்றன.
பாகுபலி திரைப்படம் மெகா ஹிட் ஆன நிலையில், அதன் 2ம் பாகம், பாகுபலி-2 என்ற பெயரில் இன்னும் இரு வாரங்களில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில், பெங்களூர் உட்பட கர்நாடகா முழுக்க அப்படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது.
கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில், சிறு, சிறு 2000 கன்னட அமைப்புகள் இணைந்து ஒரே குரலாக இந்த எதிர்ப்பை முன்வைக்கின்றன.

சத்யராஜ் பேச்சு
இதற்கு அந்த அமைப்புகள் சொல்லும் காரணம், காவிரி விவகாரத்தில் சத்யராஜின் நிலைப்பாடுதானாம். காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிடாமல் உள்ள கர்நாடகாவை எதிர்த்து, சத்யராஜ் பேசியதுதான் இந்த எதிர்ப்புக்கு காரணம்.

மன்னிப்பு கோரிக்கை
காவிரி விவகாரத்தில் கன்னடர்களை அவமானப்படுத்தும் விதமாக சத்யராஜ் பேசிவிட்டார். எனவே, சத்யராஜ் மன்னிப்பு கேட்டால்தான் ரிலீஸ் செய்ய அனுமதி கொடுப்போம் என்று அறிவித்துள்ளனர் கன்னட சங்கத்தினர்.

எங்களிடம் பேசவில்லைங்க
இதுகுறித்து கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவரும், டாக்டர் ராஜ்குமார் ரசிகர் சங்க தலைவருமான சாரா.கோவிந்து, "இந்த விவகாரம் குறித்து இதுவரை கர்நாடக திரைப்பட வர்த்தகசபையை படத்தின் தயாரிப்பாளரோ அல்லது, சத்யராஜோ அணுகவேயில்லை. சத்யராஜ் மன்னிப்பு கேட்கும்வரை படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்க மாட்டோம்" என கூறினார். ஆனால் சத்யராஜ் இதற்கெல்லாம் அசரக்கூடியவர் இல்லை என்று தமிழ் திரையுலகில் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

பின்னணி அரசியல்
பாகுபலி திரைப்படத்திற்கு பலத்த வரவேற்பு இருக்கும் என்பதால் கன்னட படங்கள் வியாபாரம் பாதிக்கும் என்பதால் சிலரின் தூண்டுதல் பேரில் இவ்வாறு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மொழி, மாநிலத்தின் பெயரால் எதிர்த்தால் மக்கள் ஆதரவு கிடைக்கும் என்பதே இதன் பின்னணி அரசியல் என்ற பேச்சு கிசுகிசுக்கப்படுகிறது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications