நல்ல காலம் பொறக்குது.. இந்த வருஷம் மழை சிறப்பா பெய்ய போகுது: இந்திய வானிலை ஆய்வு மையம்
நடப்பாண்டு காலத்தில் பருவமழை 100 சதவீதம் அளவுக்குப் பெய்ய வாய்ப்புகள் உள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
டெல்லி: கோடை வெப்பம் காரணமாக இந்திய அளவில் கடுமையான வறட்சி நிலவுகிறது.இதனால் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.இதனால் ஆங்காங்கே பொதுமக்கள் சாலைமறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்கள்.
இந்த நிலையில் நடப்பாண்டு காலத்தில் 100 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஜெனரல் கே.ஜே. ரமேஷ், கூறுகையைில், "எல்-நினோ மாற்றத்தின் தாக்கம் தற்போது குறைந்திருப்பதை வைத்துக் கணக்கிடும்போது, நடப்பாண்டில் பருவமழை அளவு சராசரியாக இருக்கும் என்று தெரிகிறது. இதனால் பருவமழை காலத்தில் 100 சதவீத அளவுக்கு மழை பெய்யக்கூடும். ஆஸ்திரேலிய வானிலை ஆராய்ச்சி மையமும், எல்-நினோவின் தாக்கம் நடப்பாண்டில் குறைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.
இதனால், பருவமழை நன்றாக பெய்யும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது" என்றார்.