ஆகா..! இதுவல்லவா உண்ணாவிரதம்.. பள்ளிக்கூடத்தை தரம் உயர்த்தக்கோரி 8வது நாளாக மாணவிகள் பட்டினி!
ஹரியானாவில் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி மாணவிகள் 8வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ரேவாரி: ஹரியானாவில் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி மாணவிகள் 8வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் குறைந்தளவு மாணவர் சேர்க்கை உள்ளதால் பள்ளிக்கூடத்தை தரம் உயர்த்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலம் ரேவாரி மாவட்டம் கோதேரா தாப்பா தேகானா கிராமத்தை சேர்ந்த மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் கடந்த புதன் கிழமை முதல் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். தங்களின் கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியை மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
உண்ணாவிரதம் இருக்கும் 11, 12-ம் வகுப்பும் படிக்கும் மாணவிகள் மூன்று கிலோ மீட்டர் தொலைவு சென்று படிக்க வேண்டியது உள்ளதாக கூறியுள்ளனர். தாங்கள் அவ்வாறு பள்ளிக்கு செல்லும் போது சிலர் பாலியல் தொல்லை கொடுப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தவறாக நடக்கும் நபர்கள்
மேலும் பள்ளிக்கூடம் செல்லும்போது ஹெல்மட் அணிந்து வரும் நபர்கள் தங்களிடம் தவறாக நடந்து கொள்வதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் பள்ளிக்கூடம் செல்லவே பயமாக இருப்பதாகவும் மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

8வது நாளாக பட்டினி
இந்தப் பிரச்சனையில் இருந்து தப்பிக்க தங்கள் பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தை மேல் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி இன்று 8வது நாளாக மாணவிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

போராட்டத்தை கைவிட முடியாது
போராட்டம் நடத்தும் மாணவிகளில் பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளனர். தங்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

உடல் நலம் பாதிப்பு
உடல் நலம் பாதிக்கப்படும் மாணவிகளுக்கு போராட்டக்களத்திலேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது. சில மாணவிகள் மட்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

தரம் உயர்த்துவதில் சிக்கல்
இதனிடையே பள்ளியில் குறைந்த அளவு மாணவர்கள் சேர்க்கையே உள்ளதால் மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவதில் சிக்கல் உள்ளதாக அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் மாணவிகளின் இந்த போராட்டத்துக்கு கிராம மக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications