அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் மீதான பலாத்கார வழக்கு விசாரணைக்கு 2 வார தடை
பெங்களூர்: மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் கவுடா மீதான பலாத்கார புகார் தொடர்பான குற்றப்பத்திரிக்கை மீது விசாரணை நடத்த மேலும் 2 வாரம் தடை விதித்து கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் கவுடாவுக்கும் குஷால்நகரைச் சேர்ந்த தொழில் அதிபர் நானய்யாவின் மகள் ராஜ்ஸ்ரீ என்கிற ஸ்வாதிக்கும் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் கார்த்திக் கவுடா தன்னை காதலித்து ரகசிய திருமணம் செய்து வேறு பெண்ணை மணக்க உள்ளார் என்று கூறி ஆர்.டி.நகர் காவல் நிலையத்தில் அவர் மீது பாலியல் பலாத்காரம், ஏமாற்றம், கடத்தல் புகார் அளித்தார் நடிகை மைத்ரி கவுடா.

அவரது புகாரின்பேரில் போலீசார் கார்த்திக் மீது பலாத்கார வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் போலீசார் கடந்த மாதம் நீதிமன்றத்தில் கார்த்திக் கவுடா மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
குற்றப்பத்திரிக்கை மீதான விசாரணை பெங்களூரில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி கார்த்திக் கவுடா சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை கடந்த மாதம் 30ம் தேதி விசாரித்த நீதிமன்றம் குற்றப்பத்திரிக்கை மீது விசாரணை நடத்த 4 வாரம் தடை விதித்தது.
நீதிமன்றம் விதித்த தடை காலம் முடிவுக்கு வரும் நிலையில் கார்த்திக் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. கார்த்திக் கவுடாவுக்கு நாளை திருமணம் நடக்க உள்ளதால் குற்றப்பத்திரிக்கை மீதான விசராணைக்கு மேலும் 2 வாரம் தடை விதிக்குமாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிமன்றம் குற்றப்பத்திரிக்கை மீதான விசாரணைக்கு மேலும் 2 வார காலம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications