இந்தியா - பாக். பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும்: காஷ்மீர் சட்ட மேலவையில் தீர்மானம்!!
டெல்லி: பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் சட்டமேலவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. ஆனால் இதனை மீறி இந்திய நிலைகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் இந்தியாவும், பாகிஸ்தானும் வருகிற 25-ந்தேதி இஸ்லாமாபாத் நகரில் வெளியுறவு செயலாளர்கள் நிலையில் பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது.
இந்நிலையில் காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் பாகிஸ்தான் தூதர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தையை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. முதலில் இந்திய பாதுகாப்பு நிலைகளை மட்டுமே குறிவைத்து தாக்கி வந்த பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையோர பகுதிகளில் வசிக்கும் கிராம மக்களை அச்சுறுத்தும் விதமாக அவர்களது குடியிருப்புகள் மீதும் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த தாக்குதலுக்கு இந்திய தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் எல்லையில் அமைதியை நிலவ செய்ய, மத்திய அரசு பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வலியுறுத்தி ஜம்மு காஷ்மீர் சட்டமேலவையில் வியாழன்று தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
எல்லையில் நிலவும் வன்முறைகளை சரிசெய்ய மத்திய அரசிடம் மாநில அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்லையில் துப்பாக்கி சூட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அத்தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications