பிரதமர் மோடியைச் சந்தித்தார் ஜெ.... தமிழகத்தின் தேவைகள் குறித்த மனு அளித்தார்!
டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழகத்தின் தேவைகள் குறித்து மனு அளித்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
இலங்கை அதிபரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மோடியின் பதவியேற்பு விழாவைப் புறக்கணித்தார்ஜெயலலிதா. ஆனால், டீசல் விலை யுயர்வைத் திரும்பப் பெற வேண்டும், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினார்.

இந்நிலையில், பிரதமர் மோடியை இன்று டெல்லியில் சந்தித்துள்ளார் ஜெயலலிதா. இந்தச் சந்திப்பின் போது காவிரி மேலாண்மை மற்றும் காவிரி ஒழுங்குமுறை ஆணையம் அமைப்பது, தமிழக இலங்கை மீனவர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

முன்னதாக பிரதமரை மதியம் 1 மணியளவில் ஜெயலலிதா சந்திப்பதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இன்று காலை சாலை விபத்தில் பலியான மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவுக்கு நேரில் அஞ்சலி செலுத்த மோடி சென்று விட்டதால் சந்திப்பு தாமதமானது. அதனைத் தொடர்ந்து சுமார் 3.30 மணியளவில் டெல்லி சௌவுத் பிளாக்கில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் ஜெயலலிதா மோடியைச் சந்தித்தார்.
இதற்கிடையே மரியாதை நிமித்தமாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்தார் ஜெயலலிதா.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications