இந்தியாவில் ‘ராணுவ புரட்சிக்கான சூழ்நிலை ஒருபோதும் ஏற்படாது’ - ஏ.கே.அந்தோணி
டெல்லி: இந்தியாவில் ராணுவப்புரட்சிக்கான சூழ்நிலை ஒருபோதும் ஏற்படாது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவத்தினரின் 2 பிரிவினர் 2012-ம் ஆண்டு டெல்லியை நோக்கி படையை நகர்த்தியதாக புதிய சர்ச்சை எழுந்தது. இதுபற்றி கருத்து தெரிவித்த ராணுவ தளபதி ஏ.கே.சவுத்ரி, இந்த பிரச்சினை தொடர்பாக மத்திய அரசுக்கும், ராணுவத்துக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருப்பதாக கூறினார்.
இந்த நிலையில் கொச்சியில் கடலோர காவல்படை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த 7 ஆண்டுகளாக நான் இந்திய பாதுகாப்பு படையினருடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். ராணுவம், கப்பல் படை, விமானப்படை மற்றும் கடலோர காவல் படையில் உள்ள உயரதிகாரிகளிடம் மட்டுமல்லாமல் சாதாரண சிப்பாயிடமும், எல்லைப் பகுதியில் பணிபுரிபவர்களிடமும் பழகியிருக்கிறேன்.
இந்தியாவில் ராணுவப்புரட்சி ஏற்படுவதற்கான சூழ்நிலை ஒருபோதும் ஏற்படாது. இந்திய ராணுவம் ஒரு பொறுப்புள்ள படை என்பதை நான் உறுதியுடன் கூறுவேன். ராணுவம் செயல்படுவதற்காக ஒரு முடிவு எடுக்கும்போது, மக்களாட்சி அரசு எடுக்கும் அனைத்து கொள்கைகளுக்கும் நிச்சயம் கட்டுப்படும். எனவே எதற்காகவும் கவலைப்படத் தேவையில்லை.
ராணுவம் டெல்லியை நோக்கி படையை நகர்த்தியது வழக்கமான பயிற்சி தான். அது முடிந்துபோன விவகாரம். ராணுவத்தின் மீது நான் முழு நம்பிக்கை வைத்திருக்கிறேன்.
இவ்வாறு ஏ.கே.அந்தோணி கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications