கொரோனாவை குணமாக்கும் என நினைத்து.. மண்ணெண்ணெய் குடித்த டெய்லர் பரிதாப உயிரிழப்பு!
போபால்: கொரோனாவை குணமாக்கும் என்று நினைத்து மண்ணெண்ணெய் எடுத்து குடித்த டெய்லர் பரிதாபமாக இறந்தார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மக்களை பாடாய்படுத்தி வருகிறது. இதனால் தினமும் ஏராளாமான பாதிப்புகளும், உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகின்றன.

தவறால் பறிபோகும் உயிர்கள்
கொரோனா பாதித்தவர்கள் கூட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்புகின்றனர். ஆனால் தனக்கு கொரோனா வந்து விடும் என்று பயந்து மற்றவர்களின் வதந்தியை நம்பி போலி மருந்துகள், சம்பந்தமே இல்லாமல் போலி பொருட்களை உட்கொண்டு பலர் உயிரிழந்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு எலுமிச்சை சாறை மூக்கில் விட்டால் கொரோனா வராது என்று அதனை செய்த ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

விடாத காய்ச்சல்
இதே போல் வேறு ஒரு ஒருவரின் தவறான கருத்தை நம்பி அதனை செய்து டெய்லர் ஒருவர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலின் சிவ் நகர் ஹினோட்டியா பகுதியில் வசித்து வந்தவர் மகேந்திரா. இவருக்கு கடந்த வாரம் ஐந்து நாட்கள் வரை காய்ச்சல் இருந்தது. இதற்காக மருந்துகளை எடுத்துக் கொண்டாலும் அவருக்கு நீண்ட நாட்கள் காய்ச்சல் குணமாகவில்லை. இதனால் தனக்கு கொரோனா வந்திருக்கும் என நினைத்தார் மகேந்திரா.

மண்ணெண்ணெய் குடித்தார்
''மண்ணெண்ணெய் கொரோனா வைரஸைக் கொல்லும். அதனை பருகு'' என்று மகேந்திரனிடம் பழகிய ஒருவர் தவறான தகவல் ஒன்றை தெரிவித்தார். இதனை உண்மை என்று நம்பிய மகேந்திரன் மண்ணெண்ணெய் எடுத்து கடகடவென்று குடித்தார். இதனை தொடர்ந்து அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. இதனால் பதறிப்போன குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் எங்கும் படுக்கைகள் காலியாக இல்லை.

பரிதாப உயிரிழப்பு
கடைசியாக இரண்டு நாட்களுக்கு முன்பு அசோகா கார்டனில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தபோது மகேந்திரா ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். முன்னதாக பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என்ற தகவலும் தெரியவந்தது. தவறான தகவலை உண்மை என நினைத்து அதனை செய்த டெய்லர் பரிதாபமாக உயிரை விட்டுள்ளார். மருத்துவர்களின் அறிவுரை இல்லாமல் எந்த பொருட்களையும், மருந்துகளையும் உட்கொள்ள கூடாது என்று தொடர்ந்து விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகின்றது. ஆனால் இதனை காதில் வாங்காமல் பலர் உயிரிழந்து வருவது வேதனையை அளிக்கிறது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications