காஷ்மீரில் அதிரடி தாக்குதலை ஆரம்பித்தது பாதுகாப்பு படை.. 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த துப்பாக்கி சண்டையில் 1 பாதுகாப்பு படை வீரர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.
Recommended Video
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த துப்பாக்கி சண்டையில் 1 பாதுகாப்பு படை வீரர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் இந்த வார தொடக்கத்தில் ஆட்சி கவிழ்ந்தது. இதனால் அங்கு மெஹபூபா முப்தி தலைமையிலான கூட்டணி ஆட்சி முடிவிற்கு வந்துள்ளது. தற்போது அங்கு ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் இங்கு ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. விரைவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியானது. அதற்காக ஐபிஎஸ் அதிகாரிகளையும், ராணுவ வீரர்களையும், ஆளுநருக்கு அறிவுரை வழங்க நியமித்ததாகவும் கூறப்பட்டது.
தற்போது ஜம்மு காஷ்மீரில் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இரவில் இருந்து சிறப்பு கமாண்டோ படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். அவசர காலங்களிலும், போர் காலங்களிலும் சிறப்பு தாக்குதல் நடத்த இந்த படை வீரர்கள் பயன்படுத்தப்படுவார்கள்.
ஸ்னைப்பர் துப்பாக்கி, ரேடார் கருவிகளுடன் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் எல்லை பகுதியில் கூடுதல் வீரர்களை நிறுத்த உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக இன்றும் நிறைய வீரர்கள் அனுப்பப்பட உள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு பயங்கரவாதிகளை ஒழிக்க ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தும் என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் சில மணி நேரத்திற்கு முன் மலை பகுதிகளில் ராணுவ வீரர்கள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள்.
இதில் பாதுகாப்பு படையினரால் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த துப்பாக்கி சண்டையில் 1 பாதுகாப்பு படை வீரர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். இன்னும் தாக்குதல் தொடர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.