ஆர்.டி.ஐ சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகளை கொண்டுவர முடியாது: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு
டெல்லி: தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகளை கொண்டுவர கூடாது என்று மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. இதுதொடர்பாக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட ஆறு கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு சுப்ரீம்கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் அனைத்தையும் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி, ஜனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பு (Association for Democratic Reforms) என்ற என்.ஜி.ஓ சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கில், மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜராகி வாதாடினார். அவர் கூறுகையில், "அரசியல் கட்சிகளுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையின்மூலம், மக்களுக்கு வர வேண்டிய நிதி தியாகம் செய்யப்பட்டுள்ளது. எனவே, அரசியல் கட்சிகள், மக்களிடம் வெளிப்படையாக இருக்க வேண்டியது கட்டாயம். ஆர்.டி.ஐ சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகளை கொண்டுவர கேட்கும் உரிமை மக்களுக்கு உள்ளது" என்று வாதிட்டார்.
மத்திய அரசின் சார்பில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட வாதத்தின்போது, மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று மத்திய அரசு கூறியது. போட்டி கட்சிகள் பிற கட்சிகளின் விவரங்களை ஆர்.டி.ஐ மூலம் அறிந்துகொள்ள வாய்ப்புள்ளதாகவும், இதனால், கட்சிகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படும் என்றும் மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications