துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி: வெங்கையாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற வெங்கையா நாயுடுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டெல்லி: துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள வெங்கையா நாயுடுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் 272 வாக்குகள் வித்தியாசத்தில் வெங்கையா நாயுடு வெற்றி பெற்றுள்ளார். வெங்கையா நாயுடு 516 வாக்குகளும், கோபாலகிருஷ்ண காந்தி 244 வாக்குகள் பெற்றனர்.
இதனையடுத்து தன்னை எதிர்த்து போட்டியிட்ட கோபாலகிருஷ்ண காந்தியை விட 272 வாக்குகள் அதிகம் பெற்று வெங்கையா நாயுடு வெற்றி பெற்றதாக அறவிக்கப்பட்டது. இதையடுத்து வெங்கையா நாயுடுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதேபோல் வெங்கையா நாயுடுவுக்கு எதிர்க்கட்சி வேட்பாளர் கோபால கிருஷ்ண காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். தனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றியையும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே வெங்கையா நாயுடுவுக்கு தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். பல ஆண்டு அரசியலில் அனுபவம் உள்ளனவர் வெங்கையா நாயுடு என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
வெங்கையா நாயுடுவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் மத்திய அமைச்சர் ப,சிதம்பரம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தமிழக பாஜக தலைவர் தமிழசை சவுந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், டிடிவி தினகரன் உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.