மும்பை மின் ரயில்களில் பயமில்லாமல் பயணிக்க - விதவிதமான ஐடியாக்களுடன் களமிறங்கும் ரயில்வே!
மும்பை: மும்பையில் மின்சார ரயில்களின் வாசற்படியில் பயணிகள் தொங்குவதை தடுக்க மத்திய ரயில்வே நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மும்பையில் மின்சார ரயில்களில் இருந்து தவறி விழுந்து பயணிகள் இறக்கும் சம்பவங்கள் அதிகரித்ததை தொடர்ந்து, அதை தடுப்பதற்கான நடவடிக்கையில் மத்திய ரயில்வே தீவிரம் காட்ட தொடங்கி உள்ளது.

இதன் முதற்கட்டமாக மின்சார ரயில்களில் கூட்ட நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் இருக்கைகளை மாற்றி அமைக்க முடிவு செய்தது.
சீட் குறைப்பு:
இதற்காக மின்சார ரயில் பெட்டிகளில் நின்று கொண்டு பயணிப்பதற்கு அதிக இடவசதி ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் சோதனை அடிப்படையில் ஒரு மின்சார ரயிலின் இருக்கைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.
வாசற்படிக்கு மேல் மழை நீர் வடிகால்:
இந்த நிலையில், பயணிகள் தவறி விழுவதை தடுப்பதற்காக மேலும் ஒரு நடவடிக்கையாக மத்திய ரயில்வே ரயில் பெட்டியின் வெளியே வாசற்படிக்கு மேல் மழை வடிவதற்காக பொருத்தப்பட்டுள்ள இரும்பு பட்டியை பயணிகள் பிடிக்க முடியாத அளவிற்கு வெட்டி அகற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தொங்கக் கூடாது:
கூட்ட நெரிசலான நேரங்களில் எப்படியாவது சென்று விட வேண்டும் என்ற எண்ணத்தில் பலர் மேலே உள்ள இந்த இரும்பு பட்டியை பிடித்து கொண்டு ஆபத்தான பயணத்தை மேற்கொள்கிறார்கள். பயணிகள் தவறி விழுந்து இறப்பதற்கு இது தான் முக்கிய காரணம் என தெரியவந்துள்ளது.
பட்டிகளை வெட்டுங்கள்:
இதன்காரணமாக மத்திய ரயில்வே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மாதுங்கா பணிமனையில் ஒரு மின்சார ரயிலின் பெட்டிகளில் உள்ள இரும்பு பட்டிகளை வெட்டி அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
மற்ற ரயில்களிலும்:
இதேபோல மற்ற ரயில்களிலும் இந்த மாற்றம் செய்யப்படும் என்று மத்திய ரயில்வே தலைமை செய்தி தொடர்பு அதிகாரி நரேந்திர பாட்டீல் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்











Click it and Unblock the Notifications