ராஜஸ்தானில் குதிரையை தெறிக்கவிட்ட வெய்யில்.. ஏசி காரில் பாய்ந்து விபத்து
ராஜஸ்தான் மாநிலத்தில் நிலவும் கடுமையான வெயில் காரணமாக சாலையில் ஓடிய குதிரை ஒன்று ஏசி காருக்குள் பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர் நகரில் கொளுத்தும் வெய்யிலை தாக்குப்பிடிக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஜெய்ப்பூர் சாலையில் தாறுமாறாக ஓடிய குதிரை, திடீரென காருக்குள் பாய்ந்ததால் பரபரப்பு நிலவியது.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் நகரில் நேற்று அதிக அடித்த அளவு வெயிலால் மக்கள் கடும் அவதியடைந்தனர். அப்போது, அசன்புரா என்ற இடத்தில் குதிரை வண்டிக்காரர் ஒருவர் தன் குதிரையை அருகில் உள்ள கம்பத்தில் கட்டி விட்டு அதற்கு உணவும் கொடுத்து கொண்டிருந்தார்.

ஆனால், வெயில் தாங்க முடியாமல் அந்தக் குதிரை கயிற்றை அறுத்து கொண்டு ரோட்டில் தாறுமாறாக ஓடியது. அப்போது வழியில் வந்த ஒரு பைக் மீது மோதி விட்டு எதிரே வந்த கார் மீது திடீரென பயங்கர வேகத்தில் பாய்ந்தது.
அதில், காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக் கொண்டு குதிரை காரின் உள்ளேயே சென்று விட்டது. இதில் காரை ஓட்டி வந்த தனியார் நிறுவன அதிகாரி ஒருவர் படு காயம் அடைந்தார்.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து படுகாயம் அடைந்த குதிரையையும், தனியார் நிறுவன அதிகாரியையும் கடும் பேராட்டத்திற்குப் பிறகு மீட்டனர். இந்த சம்பவம் ஜெய்ப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications