ரூபாய் நோட்டு தடைக்கான காரணத்தை தெரிவிக்க ஆர்பிஐ மறுப்பு
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பதை தெரிவிக்க முடியாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
டெல்லி: மத்திய அரசின் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டு ரத்து செய்ததற்க்கான காரணம் கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கியிடம் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், ரிசர்வ் வங்கி இதற்கு பதிலளிக்க மறுத்து விட்டது.
கருப்பு பணத்தை ஒழி்க்கும் நடவடிக்கையாக மத்திய அரசு கடந்த நவம்பர் 8ம் தேதி, அதிரடியாக ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இந்நிலையில் சமூக ஆர்வலரான வெங்கடேஷ் நாயக், ஆர்டிஐ சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கிக்கு ஒரு மனு அனுப்பினார். அதில், ஏன் மத்திய அரசு ரூபாய் நோட்டுகளை ரத்து செய்தது என்று கேள்வி கேட்டுள்ளார்.

இதற்கு ஆர்பிஐ அளித்த பதிலில், "ஆர்டிஐ சட்டத்தின் பிரிவு 8(1)(ஏ)-ன் கீழ் (நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, ஒருமைப்பாட்டை பாதிக்கும் தகவலை தெரிவிக்க தேவையில்லை) பண மதிப்பு நீக்கத்துக்கான காரணத்தை தெரிவிக்க இயலாது.
மேலும் பணத் தட்டுப்பாடு எப்போது தீரும் என்பது பற்றியும் தகவல் தர இயலாது. ஏனெனில், ஆர்டிஐ சட்டப் பிரிவு 2(எப்)-ன்படி எதிர்கால நிகழ்வுகளை தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என கூறப்பட்டுள்ளது. அதேபோல், மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளின் மதிப்புக்கு ஈடான, புதிய ரூபாய் நோட்டுகள் எப்போது புழக்கத்துக்கு வரும் என்ற கேள்விக்கும் பதிலளிக்க ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications