ஏடிஎம்மில் பிப்.1 முதல் பணம் எடுக்க கட்டுப்பாடு கிடையாது.. "கரண்ட் அக்கவுண்ட்"டுக்கு மட்டும்!
டெல்லி: கரண்ட் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் பணம் எடுக்க விதிக்கப்பட்டிருந்த தடையை ரிசர்வ் வங்கி நீக்கியுள்ளது. பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் அவர்கள் எந்த உச்ச வரம்பும் இன்றி அவர்கள் பணம் எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி முதல் இனி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதையடுத்து பழைய நோட்டுகளை வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் மாற்றிக்கொள்ளலாம் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து வங்கிகளில் பணத்தை டெப்பாசிட் செய்யவும் ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்கவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஒருநாளைக்கு குறிப்பிட்ட தொகை வரை மட்டுமே பணம் எடுக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கரண்ட் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கான கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி நீக்கியுள்ளது. பணமதிப்பு ரத்து நடவடிக்கைக்குப் பின் விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் இந்த கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்றும் ஆர்பிஐ அறிவித்துள்ளது. கரண்ட் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு நவம்பர் 8ஆம் தேதிக்கு முன்னர் கடைப்பிடிக்கப்பட்ட விதிகளையே வங்கிகள் கடைபிடிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் எந்த மாற்றமும் இன்றி நீடிக்கும் என்றும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது. பட்ஜட் கூட்டத்தொடர் நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில் கரண்ட் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications